பெற்றோர் இல்லாத நேரத்தில் 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 68 வயது வீட்டு உரிமையாளர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் 4 வயது சிறுமியை 68 வயது வீட்டு உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

தெற்கு டெல்லியில் உள்ள மந்தன்கிரி பகுதியில் வசித்து வருபவர் பியா(4). அவருக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். அவர்களின் பெற்றோர் அழகு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பியா மற்றும் அவரது சகோதரர்களை வீட்டில் விட்டுவிட்டு அவர்களின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர்.

4-Year-Old Allegedly Sexually Assaulted By Landlord In South Delhi

அப்போது 68 வயதான வீட்டு உரிமையாளர் அங்கு வந்துள்ளார். அவர் பியாவின் 2 சகோதரர்களிடமும் நைசாகப் பேசி அவர்களை வெளியே அனுப்பி விட்டார். பின்னர் தூங்கிக் கொண்டிருந்த பியாவை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமி கண் விழித்து தப்ப முயன்றபோது அவர் பியாவை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து யாரிடமும் கூறக் கூடாது என்று வேறு அவர் பியாவை மிரட்டியுள்ளார். பியாவின் சகோதரர்கள் வீடு திரும்புவதற்குள் வீட்டு உரிமையாளர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

பியா தனது தாய் வீட்டிற்கு வந்தவுடன் நடந்ததை தெரிவித்தார். அவர் உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்தவுடன் போலீஸ் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு வந்து வீட்டு உரிமையாளரை கைது செய்து பியாவை மருத்துவ பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.

மருத்துவ பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+