பள்ளிக்கூட கழிவறையில் வைத்து 4 வயது சிறுமி பலாத்காரம்... மும்பை ஆசிரியரின் அக்கிரமம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை பள்ளியில் 4 வயது சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை புறநகர் பாந்தூப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்ப்பவர் கேசரி உபாத்யாய். இங்கு அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி பிரி.கே.ஜி வகுப்பில் படித்து வந்தாள்.

4-year-old raped in school, employee arrested

சம்பவத்தன்று ஆசிரியர் கேசரி உபாத்யாய் 4 வயது சிறுமியை கழிவறைக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து பாந்தூப் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்றனர்.

ஆசிரியர் கேசரி உபாத்யாயை கைது செய்தனர். அவர் மீது பலாத்காரம் மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பள்ளிக்கூடத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+