கேரளாவை விடுங்க.. “தி ரியல் குஜராத் ஸ்டோரி” - 5 ஆண்டில் 41,621 பெண்களை காணவில்லை! ஷாக் ரிப்போர்ட்
காந்திநகர்: கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் இஸ்லாமியராக மதம் மாற்றப்பட்டு ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டதாக தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்களுக்கு ஆதாரம் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தால் ஏற்பட்ட சர்ச்சை இன்று வரை ஓயாமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அதில், 32 ஆயிரம் பெண்கள் இஸ்லாமியராக மதம் மாற்றப்பட்டு ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இதுவரை எந்த வழக்குகளும் பதிவாகாத நிலையில் ஆதாரமற்ற தகவல்களை கொண்டு இயக்குநர் இப்படத்தை இயக்கியுள்ளார் என்று ஊடகங்கள் விமர்சித்து உள்ளன.

இந்த நிலையில், பாஜக ஆளும் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் காணாமல் போனதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சமாக 2019 ஆம் ஆண்டு 9,268 பெண்கள் குஜராத்தில் காணாமல் போய் இருக்கிறார்கள்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகமான NCRB வெளியிட்டு இருக்கும் தரவுகளின்படி, 2018 ஆம் ஆண்டில் 9,246 பேரும், 2020 ஆம் ஆண்டில் 8,290 பெண்களும், 2017 ஆம் ஆண்டில் 7,712 பேரும், 2016 ஆம் ஆண்டில் 7,105 பெண்கள் என மொத்தம் 41,621 பெண்கள் காணாமல் போய் இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.
இதில் குறிப்பாக குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரங்களான அகமதாபாத் மற்றும் வதோதராவில் மட்டும் 2021 ஆம் ஆண்டில் 4,722 பெண்கள் காணாமல்போய் உள்ளனர். இந்த தகவல் குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து குஜராத் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான சுதிர் சின்ஹா தெரிவிக்கையில், "காணாமல்போன சில வழக்குகளில், சில பெண்கள் மற்றும் சிறுமிகள் வெளி மாநிலங்களுக்கு பாலியல் தொழிலுக்காக கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
காவல்துறை காணாமல்போனதாக வழங்கப்படும் புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவற்றை கொலை வழக்கைபோல் எடுக்க வேண்டும்." என்றார். "எனது பதவி காலத்தில் கடத்தப்பட்ட பெண்களில் பலர் சட்டவிரோத மனித கடத்தல் கும்பலால் கடத்தி சென்று வெளி மாநிலங்களில் விற்கப்படுகிறார்கள். கேதா மாவட்டத்தில் நான் எஸ்பியாக இருந்தபோது உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், ஏழை சிறுமியை தூக்கிச் சென்று தனது மாநிலத்தில் விற்று கொத்தடிமையாக்கப்பட்டார்." என்று தெரிவிக்கிறார் குஜராத் முன்னாள் கூடுதல் டிஜிபி ராஜன் பிரியதர்ஷி.
இதுகுறித்து குஜராத் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஹிரென் பங்கர் தெரிவிக்கையில், " இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் 40,000 பெண்கள் காணாமல்போனதை விட, கேரளாவில் பெண்கள் காணாமல் போனது பற்றி அதிகம் பேசுகிறார்கள்." என்றார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications