வருமானம் இல்லை... நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்திய நகரங்கள்!
டெல்லி: சீனா உள்ளிட்ட நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில், நகரங்களின் உள்ளாட்சி அமைப்புகளால் கிடைக்கும் வருவாய் மிகவும் குறைவாக இருப்பதாக "இந்தியா ஸ்பெண்ட்" ஆய்வு கூறுகின்றது.
சீனாவில் மொத்த வருவாயில் நகரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் 25 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் இது வெறும் 3 சதவீதமாக மட்டுமே உள்ளதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த 2010 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் நகரப்புறங்களில் வருமானம் 1.1 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.

மக்கள் தொகை அதிகரிப்பு...
வரும் 2050ம் ஆண்டிற்குள் இந்தியாவில் நகர்ப்புற மக்களின் எண்ணிக்கை 40.4 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த சூழலில் நகர்ப்புறங்களின் வருமானத்தை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், எதிர்காலத்தில் பெரும் சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கும் என இந்த ஆய்வு எச்சரிக்கின்றது.

வீட்டு வரி மூலம்...
மேலும், நகர்ப்புறங்களில் வீட்டு வரி மூலமாக மட்டுமே பெரும்பான்மையான வருமானம் கிடைத்து வருகிறது. கடந்த 2010ம் ஆண்டு கணக்கீட்டின் படி, பிரான்ஸ் நாட்டில் சொத்து வரி மூலம் கிடைக்கும் வருமானம் 4.3 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் இது 0.48 சதவீதமாக உள்ளது.

நிதிகமிஷன்...
எனவே தான் 14வது நிதி கமிஷன் இந்தியாவில் நகர்ப்புற வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்த உயர்வானது 10 சதவீதமாக இருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி...
ஸ்மார்ட் சிட்டிக்களை உருவாக்க தீவிரம் காட்டி வரும் மத்திய அரசு, மாநகராட்சி, நகராட்சி வருமானத்தை அதிகரிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

சீனாவில்...
சீனாவின் மொத்த அரசு செலவுகளில் நகர வருமானம் முக்கியப் பங்கு வகிக்கின்றது. கடந்த 2009ம் ஆண்டு விவரப்படி, 64.7 சதவீத செலவுகள் நகரங்களின் வருமானங்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

கட்டாயம்...
ஆனால், இந்தியாவில் நகர வருமானம் குறைவு என்பதால், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, இந்தியா விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது என இந்த ஆய்வுகள் கூறுகின்றன.
-
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications