வருமானம் இல்லை... நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்திய நகரங்கள்!
டெல்லி: சீனா உள்ளிட்ட நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில், நகரங்களின் உள்ளாட்சி அமைப்புகளால் கிடைக்கும் வருவாய் மிகவும் குறைவாக இருப்பதாக "இந்தியா ஸ்பெண்ட்" ஆய்வு கூறுகின்றது.
சீனாவில் மொத்த வருவாயில் நகரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் 25 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் இது வெறும் 3 சதவீதமாக மட்டுமே உள்ளதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த 2010 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் நகரப்புறங்களில் வருமானம் 1.1 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.

மக்கள் தொகை அதிகரிப்பு...
வரும் 2050ம் ஆண்டிற்குள் இந்தியாவில் நகர்ப்புற மக்களின் எண்ணிக்கை 40.4 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த சூழலில் நகர்ப்புறங்களின் வருமானத்தை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், எதிர்காலத்தில் பெரும் சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கும் என இந்த ஆய்வு எச்சரிக்கின்றது.

வீட்டு வரி மூலம்...
மேலும், நகர்ப்புறங்களில் வீட்டு வரி மூலமாக மட்டுமே பெரும்பான்மையான வருமானம் கிடைத்து வருகிறது. கடந்த 2010ம் ஆண்டு கணக்கீட்டின் படி, பிரான்ஸ் நாட்டில் சொத்து வரி மூலம் கிடைக்கும் வருமானம் 4.3 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் இது 0.48 சதவீதமாக உள்ளது.

நிதிகமிஷன்...
எனவே தான் 14வது நிதி கமிஷன் இந்தியாவில் நகர்ப்புற வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்த உயர்வானது 10 சதவீதமாக இருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி...
ஸ்மார்ட் சிட்டிக்களை உருவாக்க தீவிரம் காட்டி வரும் மத்திய அரசு, மாநகராட்சி, நகராட்சி வருமானத்தை அதிகரிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

சீனாவில்...
சீனாவின் மொத்த அரசு செலவுகளில் நகர வருமானம் முக்கியப் பங்கு வகிக்கின்றது. கடந்த 2009ம் ஆண்டு விவரப்படி, 64.7 சதவீத செலவுகள் நகரங்களின் வருமானங்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

கட்டாயம்...
ஆனால், இந்தியாவில் நகர வருமானம் குறைவு என்பதால், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, இந்தியா விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது என இந்த ஆய்வுகள் கூறுகின்றன.
-
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications