கொல்லம் கோவில் தீ விபத்து: 5 பேர் கைது- விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே கோவிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிபத்து குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெடிபொருள் கட்டுப்பாட்டு ஆய்வாளர், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
கொல்லம் அருகே உள்ள பரவூரில் உள்ள புட்டிங்கல் தேவி கோயில் திருவிழாவில் நேற்று அதிகாலை பொதுமக்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, போட்டிக் கொண்டு பட்டாசுகள் வெடித்தனர். அப்போது தீப்பொறிகள் பறந்து பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் விழுந்தது.

அதனால், பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயில் தேவஸ்தான கட்டடம் முழுவதுமாக கருகி இடிந்து விழுந்தது. மேலும், ஒன்றரை கிலோமீட்டர் பரப்பளவில் இருந்த 500க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
இந்த கோர தீவிபத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிவிட்டன. இதுவரை 56 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
படுகாயமடைந்த 400க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
தீவிபத்து நிகழ்ந்த இடத்தில் போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் திருவனந்தபுரம், கொல்லம், பரவூர், திருவாங்கூர் ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாணவேடிக்கை நிகழ்வில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கேரள டிஜிபி கூறியுள்ளார்.
இதனிடையே கொல்லம் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெடிபொருள் கட்டுப்பாட்டு ஆய்வாளர், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications