நீட் தேர்வு தில்லுமுல்லு...வினா தாள் லீக் செய்ய முயன்ற 5 பேர் பீகாரில் கைது!
நாடு முழுவதும் நேற்று நடந்த நீட் தேர்வின் வினா தாளை லீக் செய்ய முயன்றதாக பீகாரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா: நீட் தேர்வு வினா தாட்களை அவுட் செய்ய முயன்ற புகாரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே வினா தாள் அவுட் செய்யும் முயற்சி முறியடிக்கப்பட்டு பின்னர் அமைதியாக தேர்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.
பாட்னாவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் வினா தாள் அவுட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. அதன் பேரில் அந்தக் கல்லூரி மாணவர் சுபம் மண்டல், உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.இதே போன்று நாளந்தா பல்கலை கழகத்திலும் வினா தாள் லீக் செய்த புகாரில் மாணவர் சிவகுமார் மற்றும் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த அவுட் செய்த பின்ணணியில் டிரைவர் ஒருவரும் இருந்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.இதையடுத்து ஓட்டுநர் சஞ்சய் யாதவை போலீஸார் கைது செய்தனர்.இவர் வினாத்தாள் கட்டுகளை ஏற்றிச் சென்ற வேனின் டிரைவராக இருந்தவர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்," டிரைவர் சஞ்சய் யாதவ்,வினா தாள் கட்டுக்களை ஏற்றிச் சென்றபோது,அதன் சீலை உடைத்து வினா தாளை உருவி,வெளியே மாணவர்களுக்கு விநியோகம் செய்துள்ளார்.இவரிடம் இருந்துதான் வினா தாள் வாங்கி மற்ற 4 பேரும் நாளந்தா பல்கலை மற்றும் பாட்னா மருத்துவக் கல்லூரியில் தேர்வெழுத வந்த மாணவர்களுக்கு விநோயோகம் செய்துள்ளனர்.
பிடிபட்டவர்களிடமிருந்து நீட் தேர்வு வினா தாள் கட்டுகள், வேனின் சீலை உடைக்க பயன்பட்ட உபகரணங்கள்,செல் போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளது. மேலும் இந்த முறைகேட்டின் பின்ணணியில் வேறு யாரேனும் உள்ளார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications