For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண் முன்னே மனைவியை வன்புணர்வு செய்தார்கள்.. போலீசிடம் கணவன் வாக்குமூலம்.. டெல்லியில் கொடூரம்

டெல்லியில் காரில் இருந்த பெண் ஒருவர் ஐந்து ஆண்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லியில் குடும்பத்தார் கண்ணெதிரிலேயே பெண் பலாத்காரம்

    டெல்லி: டெல்லி மற்றும் ஹரியானாவில் சமீப காலமாக பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகம் நடந்து வருகிறது. நேற்று டெல்லி ஹரியானா தேசிய நெடுஞ்சாலையில் பாலியல் வன்புணர்வு குற்றம் நடந்து இருக்கிறது.

    காரில் இருந்த பெண்ணை அடையாளம் தெரியாத நபர்கள் வந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். போலீஸ் தற்போது இவர்களை கைது செய்து இருக்கிறது.

    இந்த சம்பவத்திற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று சொல்லப்படுகிறது. தற்போது அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.

    கார்

    கார்

    டெல்லியை சேர்ந்த அந்த பெண் தன் கணவன் மற்றும் சகோதரருடன் ஹரியானா சென்று இருக்கிறார். குடும்ப விழா ஒன்றிற்காக அவர் ஹரியானா சென்று உள்ளார். அங்கிருந்து திரும்பும் போது அவர்கள் வந்த காரை இரண்டு கார்கள் நீண்ட நேரமாக பின்தொடர்ந்து வந்து இருக்கிறது.

    பிரச்சனை

    பிரச்சனை

    இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவர் காரை நிறுத்தி சாலை ஓரத்தில் சிறுநீர் கழிக்க சென்று இருக்கிறார். அப்போது அந்த இரண்டு காரும் அங்கு வந்துள்ளது. காரில் இருந்து இறங்கிய ஐந்து பேர் அந்த பெண்ணின் கணவரை தாக்கி இருக்கிறார்கள்.

    பாலியல் வன்புணர்வு

    பாலியல் வன்புணர்வு

    அதன்பின் காரில் இருந்த பெண்ணின் சகோதரரையும் தாக்கி உள்ளனர். பின் அந்த பெண்ணை காரில் இருந்து வெளியே கொண்டுவந்து வன்புணர்வு செய்து இருக்கிறார்கள். கணவனை இரண்டு பேர் பிடித்துக் கொண்டு உள்ளனர்.

    போலீஸ்

    போலீஸ்

    தற்போது அந்த கணவன் போலீஸில் இதுகுறித்து புகார் கொடுத்து இருக்கிறார். அந்த காரில் இருந்த எண்ணை வைத்து வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. போலீஸ் தற்போது இவர்களை கைது செய்து இருக்கிறது. அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.

    போலீசிடம் வாக்குமூலம்

    போலீசிடம் வாக்குமூலம்

    இதுகுறித்து தற்போது அந்த பெண்ணின் கணவன் வாக்குமூலம் அளித்து இருக்கிறார். அதில் ''என்னை கட்டிவைத்து இருந்தார்கள். அவர்களிடம் துப்பாக்கி இருந்தது. என் கண் முன்னே என் மனைவியை வன்புணர்வு செய்தார்கள். கார் எண்ணை குறித்து வைத்து இருக்கிறேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    5 men rapes a woman in front of her husband in Delhi. 22-year-old woman was dragged out of a car and raped by them. Police currently tracking the men.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X