Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேகாலயா சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு.. நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய 5 பாயிண்ட்

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் நடைபெறும் சட்டசபைத் தேர்தல் குறித்த 5 பாயிண்டுகளை பார்ப்போம்.

Subscribe to Oneindia Tamil

ஷில்லாங்: இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவிலும் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேகாலயா சட்டசபைத் தேர்தல் குறித்த 5 பாயிண்டுகளை பார்ப்போம்.

வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த சில வாரங்களுக்கு முன் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பொதுவாகவே பெரிய மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களைபோல் வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் தேர்தல்கள் உற்று நோக்கப்படுவது கிடையாது.

தள்ளிவைப்பு

தள்ளிவைப்பு

மேகாலயா மாநிலத்தில் 60 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், சோகியாங் தொகுதி யுடிபி கட்சியின் வேட்பாளர் எச்டிஆர் லைங்தோ காலமானதால் அந்த தொகுதிக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த மாநிலத்தில் 59 தொகுதிளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.

பன்முனைப் போட்டி

பன்முனைப் போட்டி

மேகாலயாவில் காங்கிரஸ், பாஜக, கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் இடையே பன்முனைப் போட்டி நடக்கிறது. முன்னாள் முதலமைச்சர் முகுல் சங்மா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி தாவிய காரணத்தால் மேகாலயாவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக உள்ளது.

2018 தேர்தல்

2018 தேர்தல்

காங்கிரஸ் கட்சி கடந்த முறை இந்த மாநிலத்தில் 21 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியானது. ஆனால், இம்முறை அதன் வாக்குவங்கி குறைந்துள்ளது. மேகாலயாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 2 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆனால், தேசிய மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆளும் கூட்டணியில் இடம்பிடித்தது.

 பாஜக தனித்து போட்டி

பாஜக தனித்து போட்டி

ஆனால், தற்போது இரு கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டதால் தனியாக போட்டியிடும் பாஜக 60 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிடுகிறது. தேசிய மக்கள் கட்சியை பொறுத்தவரை மேகாலயா மட்டுமின்றி அனைத்து வட கிழக்கு மாநிலங்களிலும் அதிகாரத்தை கைப்பற்ற திட்டமிட்டு காய்களை நகர்த்தியது.

தேசிய மக்கள் கட்சி

தேசிய மக்கள் கட்சி

இதுவே பாஜகவுடன் அந்த கட்சிக்கு மோதல் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது. மணிப்பூரில் சங்மாவின் என்பிபி போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்று வாக்கு வங்கியை உயர்த்தியது. அதேபோல் அருணாச்சல பிரதேசத்திலும் தேசிய மக்கள் கட்சிக்கு வாக்குவங்கி உள்ளது. நாகாலாந்திலும் அடுத்ததாக அந்த கட்சி கால்பதிக்க உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+