ரூ.50 கோடிக்கு குறைவாக வர்த்தகம் செய்யும் நிறுனங்களுக்கு 5% வரி குறைப்பு
ஆண்டுக்கு 50 கோடி ரூபாய்க்கு குறைவாக வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு 5 சதவீத வரி குறைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ஆண்டுக்கு 50 கோடி ரூபாய்க்கு குறைவாக வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு 5 சதவீத வரி குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். இதன் மூலம் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் என்றும் ஜேட்லி கூறியுள்ளார்.
2017-18ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சிறு நிறுவனங்களுக்கான வரிமான வரி குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டுக்கு 50 கோடிக்கு குறைவாக வர்த்தகம் செய்யும் சிறு நிறுவனங்களுக்கான வரி 5% குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதனை அறிவித்தார். ஆண்டுக்கு 6.94 லட்சம் நிறுவனங்கள் அரசுக்கு வருமான வரி செலுத்துவதாக அவர் கூறினார்.
அவற்றில் 96 விழுக்காடு நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள்தான் என்றும் அருண் ஜேட்லி கூறினார். வரி குறைப்பு அறிவிப்பு சிறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் கூறினார்.