உத்தரகாண்ட்: சுதந்திர தின விழாவுக்கு டிமிக்கு கொடுத்த 54 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ்!
நாட்டின் 71வது சுதந்திர தினவிழாவில் பங்கேற்காத 54 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது மத்திய அரசு.
டேராடூன்: சுதந்திர தினவிழாவில் பங்கேற்காத 54 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது உத்தரகாண்ட் அரசு. இது தேசிய அளவில் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 15ம் தேதி நாடு முழுவதும் 71வது சுதந்திர தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. அப்போது உத்தரகாண்ட் மாநிலத்திலும் சுதந்திரதின விழா ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தது.

அந்த விழாவை, உத்தரகாண்ட் மாநில ஐஏஎஸ் அதிகாரிகள் 87 பேரில் 54 பேர் புறக்கணித்துள்ளனர். இதனை அறிந்த அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் அதிர்ச்சியானார். இதுகுறித்து அதிகாரிகள் வட்டத்தில் அவர் விசாரித்தார்.
இதனையடுத்து முதல்வர் பங்கேற்ற சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ளாமல், விழாவைத் தவிர்த்த 54 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் விளக்கம் கேட்டு உத்தரகாண்ட் மாநில அரசு நோட்டீஸ் விடுத்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 17 ஆண்டுகளில், இவ்வளவு ஐஏஎஸ் அதிகாரிகள் மொத்தமாக சுதந்திர தினவிழாவுக்கு வராமல் 'டிமிக்கி' கொடுத்தது இந்த முறைதான் என்கிறார்கள் உத்தரகாண்ட் மாநில தலைமை செயலக அதிகாரிகள்.
சுதந்திர தினத்தை புறக்கணித்த அதிகாரிகளில், முதன்மை செயலாளர், கூடுதல் செயலாளர் உள்பட பல மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications