ஆப்கன் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- வட இந்தியா முழுவதும் அதிர்ந்தது!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லையில் இன்று சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகுகளாக பதிவாகி இருந்த நிலநடுக்கத்தால் வட இந்திய மாநிலங்கலும்அதிர்ந்தன.
ஆப்கானிஸ்தான் -பாக். எல்லைப் பகுதியில் ஹிந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி இருந்தது.

அதே நேரத்தில் டெல்லி, ஸ்ரீநகர், சண்டிகர் உள்ளிட்ட வட இந்திய மாநில நகரங்களிலும் இந்நிலநடுக்கம் உணரப்பட்டது. மொத்தம் 40 வினாடிகள் இந்த நிலநடுக்கத்தை உணர முடிந்தது.
நேபாளத்தை உலுக்கிய மிக மோசமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வட இந்திய மாநிலங்களில் அவ்வப்போது நில அதிர்வுகள் உலுக்கி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications