காஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன? தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது? இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்!
ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்தியா பாகிஸ்தான் ராணுவம் இடையே நடந்து வரும் சண்டை குறித்து இந்திய ராணுவ ஜெனரல் பிபின் ராவத் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்தியா பாகிஸ்தான் ராணுவம் இடையே நடந்து வரும் சண்டை குறித்து இந்திய ராணுவ ஜெனரல் பிபின் ராவத் விளக்கம் அளித்துள்ளார்.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றதை ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ முகாம்கள் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
12 மணி நேரமாக இந்த தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. பிஓகே எனப்படும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியான டாங்தார் பகுதியில் இந்த சண்டை நடந்து வருகிறது.

இயல்புநிலை
இது குறித்து இந்திய ராணுவ ஜெனரல் பிபின் ராவத் விளக்கம் அளித்துள்ளார். அதில், காஷ்மீரில் தற்போது இயல்புநிலை திரும்பி வருகிறது. ஆனால் யாரோ இந்தியாவிற்கு உள்ளும், வெளியேயும் இருந்து கொண்டு தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இதன் மூலம் அவர் காஷ்மீரில் அமைதியை குலைக்க முயன்று வருகிறார்கள். இது குறித்து இந்திய ராணுவ ஜெனரல் பிபின் ராவத் விளக்கம் அளித்துள்ளார். அதில், காஷ்மீரில் தற்போது இயல்புநிலை திரும்பி வருகிறது. ஆனால் யாரோ இந்தியாவிற்கு உள்ளும், வெளியேயும் இருந்து கொண்டு தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இதன் மூலம் அவர் காஷ்மீரில் அமைதியை குலைக்க முயன்று வருகிறார்கள்.

எல்லை எப்படி
சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதில் இருந்தே எல்லை பகுதியில் இது போல தீவிரவாதிகள் ஊடுருவ முயன்று வருகிறார்கள். காஷ்மீரில் மக்களின் ஓற்றுமை மற்றும் அமைதியை குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் செயல்பட முயன்று வருகிறார்கள்.

என்ன முயற்சி
கடந்த ஒரு மாதமாக பிஓகே பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்று வருகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் தங்களது தீவிரவாத முகாமை முன்னோக்கி நகர்த்த முயல்கிறார்கள். நேற்று மாலை டங்தார் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.

கடுமையான தாக்குதல்
அதே சமயம் பார்த்து எங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆனால் நாங்கள் உடனடியாக சுதாரித்துக் கொண்டு அங்கு இருந்த தீவிரவாத முகாம்கள் மீது தாக்குகள் நடத்தினோம். மிகவும் கடுமையான தாக்குதலை நாங்கள் அங்கு செய்தோம்.

என்ன பாதிப்பு
இதில் தீவிரவாத முகாம்கள் மோசமாக பாதிப்படைந்தது. அவர்களின் முகாம்கள் பல மொத்தமாக அழிந்தது. இதில் 6-10 பாகிஸ்தான் வீரர்கள் இறந்திருக்கலாம். 3 முகாம்கள் மொத்தமாக அழிந்துவிட்டது. அதே அளவு தீவிரவாதிகள் இறந்திருக்கலாம் என்று பிபின் ராவத் கூறியுள்ளார் .
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications