ராஜஸ்தானில் மாயாவதிக்கு பேரதிர்ச்சி.. 6 பிஎஸ்பி எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கு தாவல்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மாயாவதியின் கட்சியை சேர்ந்த 6 பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை இரவு காங்கிரஸ் கட்சிக்கு தாவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 100 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதன் முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். இந்த நிலையில் மாயாவதியின் கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றது.

Big jolt to Mayawati in Rajasthan

சுயேச்சைகளாக வெற்றி 12 எம்எல்ஏக்களும் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்க போவதாக கடந்த ஆண்டு தெரிவித்தனர். இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற 6 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு நேற்று இரவு தாவினர்.

உதைய்பூர்வதி தொகுதியை சேர்ந்த எம்எல்ஏ ராஜேந்திர குட், நத்பய் தொகுதி எம்எல்ஏ ஜோகேந்திர சிங் அவானா, லக்கான் சிங் மீனா (கரோலி), சந்தீப் யாதவ் (திஜாரா) மற்றும் தீப்சந்த் கேரியா (கிஷான்கர்பாஸ்) ஆகிய 6 பேரும் காங்கிரஸில் இணைந்தனர்.

இவர்கள் 6 பேரும் முதல்வர் அசோக் கெலாட்டுடன் தொடர்பில் இருந்து வந்தனர். இந்த நிலையில் இன்று சட்டசபை சபாநாயகர் சிபி ஜோஷியை சந்தித்து தாங்கள் 6 பேரும் காங்கிரஸில் இணைந்துள்ளது குறித்த கடிதத்தை அளித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+