வெளிநாட்டவரின் பேக்குகளைத் திருடி பணத்தை எடுத்துக் கொண்டு... ஆவணங்களை ரிட்டர்ன் செய்த திருடன்
மும்பை: வெளிநாட்டவர்களாக குறி வைத்து திருடி வந்த 61 வயது திருட்டுத் தாத்தாவை மும்பை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள அந்நபரின் பெயர் கிஷோர் சுப்ரமணியன் மட்டாலி(61). வெளிநாட்டில் இருந்து இந்தியா வருபவர்களைக் குறி வைத்து திருடுவது தான் கிஷோரின் வழக்கம். ஆனால், அவ்வாறு திருடுகையில், சம்பந்தப்பட்டவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் அந்தப் பையில் இருந்தால், அவற்றைக் குப்பையில் எறிந்து விட மாட்டார் கிஷோர்.

அதற்குப் பதில் அந்த ஆவணங்களை முறைப்படி உரியவரின் முகவரிக்கு அனுப்பி வைத்து விடுவார். இப்படி ஆவணம் ஒன்றை அனுப்பிய போது தான் மும்பை போலீசில் சிக்கியுள்ளார் கிஷோர்.
சவுதி அரேபியாவில் வாழ்ந்து வரும் தேவிதாசன் என்பவர் தனது கைப்பை திருடு போய் விட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார். அதில், பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது தேவிதாசனின் மங்களூர் முகவரிக்கு அவரது பாஸ்போர்ட் தபாலில் வந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கிஷோர் சவுதி தூதரகத்தில் விசாரித்து தேவிதாசனின் முகவரியைக் கண்டுபிடித்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து கிஷோரை மும்பை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடமிருந்து மேலும் சில வெளிநாட்டவரின் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
மேலும் கிஷோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பல்வேறு திருட்டுகளில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், தெலுங்கு, மலையாளம், தமிழ், இங்கிலீஷ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மராத்தி என பல மொழியைத் தெரிந்து வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டுள்ள கிஷோர் பி.எஸ்ஸி பட்டதாரி என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications