மருந்துகளுக்கு செலவிட்டே நொடித்துப் போகும் மக்கள்... என்ன செய்யலாம்?- கேட்கும் சுகாதாரத் துறை!
டெல்லி: மருத்துவ செலவு அதிகரிப்பால் ஆண்டுக்கு 6 கோடி பேர் வறுமை நிலைக்கு ஆளாவதாக அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளது மத்திய சுகாதாரத்துறை.
மக்களின் வருமானத்தை அதிகரிக்கவும், ஆரோக்கியத்தைப் பேணவும், வறுமையை ஒழிக்கவும் என பல்வேறு திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. புதிதாக பல திட்டங்களை அறிமுகப் படுத்தியும் வருகின்றன.
ஆனால், ஆண்டுதோறும் சுமார் 6 கோடியே 30 லட்சம் மக்கள் மருத்துவ செலவு அதிகரிப்பால் வறுமை நிலைக்குத் தள்ளப் படுவதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.

மருத்துவச் செலவு...
2011-2012-ம் ஆண்டில் ஆண்டு வருமானத்தில் கிராமப்புற பகுதியில் 6.9 சதவீதமும், நகர்ப்புற பகுதியில் 5.5 சதவீதம் மருத்துவத்துக்காக செலவிடப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

6 கோடி மக்கள்...
இந்த புள்ளி விபரத்தின் படி ஆண்டுதோறும் 6 கோடியே 30 லட்சம் மக்கள் மருத்துவத்திற்காக அதிக அளவில் செலவு செய்வது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

திட்டக்குறிப்பு...
இதில் பாதிக்கப்படும் மக்களை மீட்பதற்கு, சர்வதேச அளவில் புதிய சுகாதார திட்டம் ஒன்றை வகுத்து அமல்படுத்த வேண்டும் என்றும், தேசிய அளவில் புதிய சுகாதார கொள்கை திட்டத்தை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்றும் தேசிய சுகாதார அமைப்பு திட்டக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

என்ன செய்யலாம்...
மேலும், இவ்வாறு மருந்துவ செலவால் மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப் படுவதை தடுப்பதற்கான வழிமுறை மற்றும் ஆலோசனைகளை வழங்குமாறு இணையதளம் மூலமாக ஐடியாவையும் பொதுமக்களிடம் கேட்டுள்ளது சுகாதார அமைச்சகம்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications