மருந்துகளுக்கு செலவிட்டே நொடித்துப் போகும் மக்கள்... என்ன செய்யலாம்?- கேட்கும் சுகாதாரத் துறை!
டெல்லி: மருத்துவ செலவு அதிகரிப்பால் ஆண்டுக்கு 6 கோடி பேர் வறுமை நிலைக்கு ஆளாவதாக அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளது மத்திய சுகாதாரத்துறை.
மக்களின் வருமானத்தை அதிகரிக்கவும், ஆரோக்கியத்தைப் பேணவும், வறுமையை ஒழிக்கவும் என பல்வேறு திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. புதிதாக பல திட்டங்களை அறிமுகப் படுத்தியும் வருகின்றன.
ஆனால், ஆண்டுதோறும் சுமார் 6 கோடியே 30 லட்சம் மக்கள் மருத்துவ செலவு அதிகரிப்பால் வறுமை நிலைக்குத் தள்ளப் படுவதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.

மருத்துவச் செலவு...
2011-2012-ம் ஆண்டில் ஆண்டு வருமானத்தில் கிராமப்புற பகுதியில் 6.9 சதவீதமும், நகர்ப்புற பகுதியில் 5.5 சதவீதம் மருத்துவத்துக்காக செலவிடப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

6 கோடி மக்கள்...
இந்த புள்ளி விபரத்தின் படி ஆண்டுதோறும் 6 கோடியே 30 லட்சம் மக்கள் மருத்துவத்திற்காக அதிக அளவில் செலவு செய்வது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

திட்டக்குறிப்பு...
இதில் பாதிக்கப்படும் மக்களை மீட்பதற்கு, சர்வதேச அளவில் புதிய சுகாதார திட்டம் ஒன்றை வகுத்து அமல்படுத்த வேண்டும் என்றும், தேசிய அளவில் புதிய சுகாதார கொள்கை திட்டத்தை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்றும் தேசிய சுகாதார அமைப்பு திட்டக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

என்ன செய்யலாம்...
மேலும், இவ்வாறு மருந்துவ செலவால் மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப் படுவதை தடுப்பதற்கான வழிமுறை மற்றும் ஆலோசனைகளை வழங்குமாறு இணையதளம் மூலமாக ஐடியாவையும் பொதுமக்களிடம் கேட்டுள்ளது சுகாதார அமைச்சகம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications