ஜார்க்கண்ட்: முதல் கட்ட சட்டசபை தேர்தலில் 43 தொகுதிகளில் 685 பேர் வேட்பாளர்கள்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் 43 தொகுதிகளில் மொத்தம் 685 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். ஜாம்ஷெட்பூர் மேற்கு சட்டசபை தொகுதியில் அதிகபட்சமாக 28 வேட்பாளர்களும் ஜகநாத்பூர் தொகுதியில் குறைந்தபட்சமாக 8 வேட்பாளர்களும் களம் காண்கின்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2-வது கட்ட தேர்தல் நடைபெறும் 38 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமையுடன் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் தேர்தல் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இம்மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 43 தொகுதிகளில் அக்டோபர் 18-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. அக்டோபர் 25-ந் தேதியுடன் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்தது. மொத்தம் 805 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனைக்குப் பின்னர் 743 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பு மனு திரும்பப் பெற கடைசிநாளான நேற்று 58 பேர் வாபஸ் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து 43 தொகுதிகளில் நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 685 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர் என தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஜாம்ஷெட்பூர் மேற்கு தொகுதியில் அதிகபட்சமாக 28 பேரும் ஜகநாத்பூர் தொகுதியில் குறைந்தபட்சமாக 8 பேரும் களம் காண்கின்றனர்.
2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இந்த 43 தொகுதிகளில் மொத்தம் 633 பேர் போட்டியிட்டிருந்தனர்.
2-வது கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் 38 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமையுடன் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்தது. மொத்தம் 634 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ரூ121.14 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் இந்த தேர்தல் காலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட் தேர்தல்களில் அதிகாரிகளால் மிக அதிகமாக இந்த முறைதான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்களை சீர்குலைக்கும் சதித் திட்டத்துடன் 3 மாவோயிஸ்டு தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications