இந்த ஊர் செட்டாகாது.. இந்தியாவிலிருந்து வரிசையாக வெளியேறும் கோடீஸ்வரர்கள்.. அதிர்ச்சி ரிப்போர்ட்!
இந்தியாவிலிருந்து வெளியேறும் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகி இருப்பதாக ஆய்வு ஒன்று வெளியாகி இருக்கிறது.
சென்னை: இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் இங்கிருந்து வெளிநாட்டில் குடிபெயரும் இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகம் ஆகிறது.
இதனால்தான் என்னவோ அமெரிக்கா எச்1-பி விசாவிற்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்க பார்க்கிறது. இந்த நிலையில் வெளிநாட்டிற்கு செல்லும் இந்திய பணக்காரர்கள் குறித்த அதிர்ச்சி ஆய்வு ஒன்று வெளியாகி இருக்கிறது.
ஒவ்வொரு நாட்டில் இருந்தும் எவ்வளவு பணக்காரர்கள் வெளிநாட்டிற்கு செல்கிறார்கள் என்று இந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.
ஏன்
ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் பணக்காரர்கள் அந்த நாட்டின் வளம் போதாமல் வெளிநாடு செல்வதாக கூறப்பட்டுள்ளது. மீண்டும் அந்த நாடு பணக்கார நாடாக மாறும் போது அவர்கள் திரும்பி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் நாட்டின் வளத்தில் பாதிக்கும் மேல் அவர்கள்தான் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளது.
மீண்டு வருகிறார்கள்
இதில் ஆஸ்திரேலியா நாடு மட்டும் நல்ல நிலையில் இருக்கிறது. அந்த நாட்டை விட்டு வெளியே சென்ற பல பணக்காரர்கள் மீண்டும் அந்த நாட்டிற்கு திரும்பி இருக்கிறார்கள். சென்ற வருடம் மட்டும் 10 ஆயிரம் பணக்காரர்கள் அந்த நாட்டிற்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.
7000
இந்தியா இதில் மோசமாக இருக்கிறது. இந்தியா 2ம் இடம் பிடித்துள்ளது. சென்ற வருடம் மட்டும் 7000 பணக்காரர்கள் இந்தியாவை விட்டு சென்றுள்ளனர். இதில் 2016ஐ விட 16 சதவிகிதம் அதிகம். இதில் பலரது முக்கிய தேர்வு அமெரிக்காதான் எனப்படுகிறது.
10000 பேர்
இதில் சீனா முதல் இடம் வகிக்கிறது. அந்த நாட்டில் இருந்து கடந்த வருடம் மட்டும் 10000 பேர் வெளியேறி இருக்கிறார்கள். அவர்களும் அதிகமாக அமெரிக்க சென்றுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இது பெரிய ஆபத்தாக முடியும் எனப்படுகிறது.