Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

7/11 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 8 பேருக்கு மரண தண்டனை கோரும் அரசு தரப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: 7/11 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 12 பேரில் 8 பேருக்கு மரண தண்டனை அளிக்குமாறு அரசு தரப்பு கோரியுள்ளது.

7/11 மும்பை ரயில் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 12 பேருக்கான தண்டனையை வரும் 30ம் தேதி மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவிக்க உள்ளது. இந்நிலையில் அந்த 12 பேரில் 8 பேர் மரணத்தின் வியாபாரி போன்று செயல்பட்டதாகக் கூறி அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை அளிக்குமாறு அரசு தரப்பு வழக்கிறஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

7/11 mumbai train blast- Prosecution seeks death penalty for 8, calls them merchants of death

ந்த வழக்கு குறித்த அரசு மற்றும் எதிர்தரப்பு வாதங்கள் ஒரு வார காலமாக நடந்தது. இதையடுத்து வரும் 30ம் தேதி வழக்கின் தீர்ப்பை வழங்கவுள்ளார் நீதிபதி ஒய்.எஸ். ஷிண்டே. ரயில்களில் வெடிகுண்டுகளை வைத்த 5 பேருக்கும் கூட மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரசு தரப்பில் கோரப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞரோ உச்ச நீதிமன்றம் அளித்துள்ள பல்வேறு தீர்ப்புகளை உதாரணம் காட்டி அந்த 12 பேருக்கும் குறைந்தபட்ச தண்டனை அளிக்குமாறு நீதிபதியை கேட்டுக் கொண்டுள்ளார்.

தன்விர் அகமது அன்சாரி(37), முகமது சாஜித் அன்சாரி(35), எஹ்திஷாம் சித்திக்கி(30). கமால் அகமது அன்சாரி(37), முகமது பைசல் ஷேக்(36), ஜமிர் அகமது ஷேக்(36), முகமது மஜித் ஷபி(32), ஷேக் ஆலம் ஷேக்(41), முஜம்மில் ஷேக்(27), சொஹைல் மெஹ்மூது ஷேக்(43), நவீத் ஹுசைன் கான்(30), ஆசிப் கான்(38) ஆகியோர் தான் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட உள்ளவர்கள் ஆவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+