கல் குவாரியில் வேன் கவிழ்ந்து 7 பேர் பலி
கோலாப்பபுர்: மகாராஷ்ட்ரா மாநில தென்மாவட்டங்களில் ஒன்றான கோலாப்பபுரில் வாகனம் கல்குவாரியில் வேன் கவிந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பேர் காயமுற்றனர்.
கோலாப்பபுர் மாவட்ட கிராம மக்கள் காஹல் என்ற இடத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டு வாகனம் ஒன்றில் அதிகாலை 1 மணி அளவில் வீடு திரும்பினர் அப்போது அவர்கள் வந்த வேனை பஸ்தவாதே என்ற கிராமம் அருகே அதன் ஓட்டுனர் திருப்ப நேர்ந்தது. இந்நிலையில் அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக அங்குள்ள கல்குவாரி குட்டையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர்.11 பேர் காயம் அடைந்தனர். காயமுற்ற 11 பேரும் காஹல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்த 7 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications