திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீஸ் மீண்டும் துப்பாக்கி சூடு: செம்மரம் வெட்டிய 7 பேர் கைது!
திருப்பதி: திருப்பதி சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்தியவர்கள் மீது ஆந்திரா போலீசார் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். செம்மரம் கடத்தியதாக 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல்காரர்கள் விட்டுச்சென்ற 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் கும்பலின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. செம்மரங்களை வெட்டி கடத்துவதை தடுக்க ஆந்திர அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும் அவர்களால் செம்மரக் கடத்தல் கும்பல் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை
கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 20 தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் எர்லகுண்டா என்ற இடத்தில் செம்மரக்கடத்தல் கும்பல் ஒன்று முகாமிட்டு மரங்களை வெட்டுவதாக நள்ளிரவு 12 மணியளவில் செம்மரக்கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

செம்மரம் வெட்டிக்கடத்தல்
இதை தொடர்ந்து, சிறப்பு படை போலீசார் எர்லகுண்டா வனப்பகுதிக்குள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது, அங்கு கடத்தல் கும்பலை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் செம்மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். உடனே போலீசாரை அவர்களை சரணடையுமாறு எச்சரித்ததாக தெரிகிறது. ஆனால் சரணடைய மறுத்த அந்த கும்பல், போலீசாரை மீது கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு
கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, போலீசார் வானத்தை நோக்கி 3 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். துப்பாக்கி சூடு நடத்தியதால் கடத்தல் கும்பல் நாலாபுறமும் சிதறி ஓட, போலீசார் அவர்களை துரத்தி பிடித்துள்ளனர். ஆனால், அந்த கும்பலில் இருந்த 7 பேர் மட்டுமே பிடிபட, மற்றவர்கள் தப்பி ஓடி இருக்கின்றனர்.

7 பேர் கைது
இதையடுத்து, 7 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை பாக்ராபேட்டை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிடிபட்ட 7 பேரும் தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

செம்மரக்கட்டைகள் பறிமுதல்
செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி. காந்தாராவ் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். கடத்தல்காரர்கள் விட்டுச்சென்ற 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications