Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"2 டீம்! 7 பயங்கரவாதிகள்.. 3 பக்கத்தில் இருந்தும் அட்டாக்!" காஷ்மீர் தாக்குதல்! என்ன நடந்தது! பகீர்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் நேற்றைய தினம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதனிடையே இந்தத் தாக்குதல் குறித்து இப்போது சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது. அங்கே பாகிஸ்தான் எல்லையில் இருந்து, இந்தியப் பகுதிக்குள் ஊடுருவல் முயற்சி நடந்து கொண்டே தான் இருக்கிறது.

7 terrorists involved in Kashmir terror attack that killed 5 jawans

இந்தியப் பகுதிகள் ஊடுருவ முயல்வதும் அதை இந்திய ராணுவத்தினர் முறியடிப்பதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கிடையே நேற்று அங்கு மிக மோசமான ஒரு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

காஷ்மீர்: அங்கே காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கே நமது இந்திய ராணுவ வீரர்கள் வழக்கம் போல ராணுவ வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பிம்பர் காலி பகுதியில் இருந்து சென்றுகொண்டு இருந்த போது வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் 5 இந்திய ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்குள்ள பாடா துரியன் நீர்வீழ்ச்சிக்கு அருகே பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது.

முதலில் இது எதிர்பாராமல் நடந்த விபத்து என்றே கருதப்பட்டது. கடுமையான மழை பெய்து கொண்டிருந்த நிலையில், மின்னல் தாக்கியதில் வாகனம் தீப்பிடித்திருக்கலாம் என்று கருதப்பட்டது. அதன் பின்னரே இது திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்பது உறுதியானது. இந்திய ராணுவத்தினர் வாகனத்தில் அவர்களை 3 பக்கத்திலும் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர்,.

7 terrorists involved in Kashmir terror attack that killed 5 jawans

எப்படி நடந்தது: அப்போது பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசியதில் வாகனம் தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்கள் ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனிடையே ஐந்து ராணுவ வீரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலில் இரண்டு குழுக்களைச் சேர்ந்த ஏழு பயங்கரவாதிகள் ஈடுபட்டதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தான் தேசியவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

எந்த பயங்கரவாதிகள்: ஜெய்ஷ்-இ-முகமது (JeM) மற்றும் லஷ்கர்-இ-தொய்பா (LeT) உதவியுடன் இயங்கும் உள்ளூர் பயங்கரவாத அமைப்பே இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. முதலில் ஜெய்ஷ்-இ-முகமது ஆதரவு பயங்கரவாதக் குழுவான மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி (PAFF) இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டதாகத் தகவல் வெளியானது. அதன் பின்னரே இதில் லஷ்கர் இடி பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ரஜோரி மற்றும் பூஞ்ச் ​​வழியாக இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக வெளியான தகவலைப் புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருகின்றன. ஜேஇஎம் மற்றும் லஷ்கர் இடி பயங்கரவாதிகளைப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஊடுருவி கிராமங்களில் மறைத்து இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் ராணுவ வீரர்கள் வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது மழை பெய்த நிலையில், அதைப் பயன்படுத்தி வாகனத்தை 3 பக்கங்களும் சூழ்ந்து கொண்ட தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது அவர்களில் சிலர் கையெறி குண்டை வீசியதில் தான் வாகனம் தீப்பற்றியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+