சிறுவனின் முகத்தை கடித்து, தொண்டையை கவ்விய பிட்புல் நாய்.. கோவாவில் தந்தையின் கண்முன் நடந்த கொடூரம்
பனாஜி: மனிதர்களுக்கு மிகவும் விசுவாசமான பிராணியாக வளர்க்கப்படும் நாய்களால் ஏராளமான பிரச்னைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் கோவாவில் நடந்துள்ளது. பிட்புல் நாய் மூர்க்கத்தனமாக கடித்து குதறியதில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவா, பனாஜி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபாஸ் கலங்குட்கர். அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். சிறுவனின் அம்மா வீட்டு வேலை செய்து வருகிறார். நேற்று சிறுவன் தன் அம்மாவுடன் அருகில் இருந்தவரின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு . பிட்புல் வகை நாய் திடீரென சிறுவனை கடித்து குதறியுள்ளது. பலத்த காயமடைந்த சிறுவன் உடனடியாக சிகிச்சைக்காக, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை பிரேமானந்த், பிட்புல் நாய் என் மகனின் முகத்தை கடித்து கிழித்து அவன் தொண்டையை கவ்வுவதை பார்த்து கதறினேன். இதே நாய் சில மாதங்களுக்கு முன்பு மற்றொரு குழந்தையை கடித்து குதறியது. அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தை தப்பித்துவிட்டது. ஆனால் எங்கள் மகனை காப்பாற்ற முடியவில்லை. என்றார் வேதனையுடன்.
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் நில்காந்த் ஹலர்கர் கூறுகையில், மாநில அரசு இதுபோன்ற ஆக்ரோஷமான நாய்களுக்கு தடை விதித்துள்ளோம். ஆனால் நாய்களின் உரிமையாளர்கள் நீதிமன்றம் வரை சென்று அனுமதி வாங்கி வருகின்றனர். கோவாவில் இருந்தும் பலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுகுறித்து முதலமைச்சரிடம் பேசி, இதுபோன்ற நாய்களுக்கு முற்றிலும் தடை விதிப்பது, வழிகாட்டுதல்களை வெளியிடுவோம்.
இதுபோன்ற வெளிநாட்டு ஆக்ரோஷ நாய்கள் குழந்தைகளை கடிப்பது தொடர் கதையாகி வருகிறது. கடந்த வருடம் இதே கோவாவில் ராட்வீலர் இரண்டு குழந்தைகளை கடித்து பலத்த காயத்தை ஏற்படுத்தியது. அதன் உரிமையாளரை காவல்துறை கைது செய்திருந்தனர். கோவாவில் செல்லப் பிராணிகள் வளர்ப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2012ம் வருடம் கோவாவில் மொத்தம் 52,323 வளர்ப்பு நாய்கள் இருந்தன. அதுவே 2019ம் வருடத்தில் கோவாவில் 89,976 வளர்ப்பு நாய்கள் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கோவாலில் சராசரியாக தினசரி 90 காய் கடி சம்பவங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு 15 நிமிடத்துக்கு ஒருமுறையும் ஒருவர் நாய் கடிக்கு உள்ளாகிறார். இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சுமார் 8,700 வழக்குகள் பதிவாகியுள்ளன.
பிட்புல், ராட்வீலர் போன்ற ஆக்ரோஷமான நாய்களின் பட்டியலை எடுத்து விரைவில் அவற்றை முற்றிலுமாக தடை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சவந்த் கூறியுள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications