மேகாலயா போராளிகள் 748 பேர் முதல்வர் சங்மா முன்னிலையில் சரண்
Subscribe to Oneindia Tamil
துரா, மேகாலயா: மேகலாயாவில் அரசுக்கு எதிராக செயல்பட்ட 748 போராளிகள் அரசிடம் நேற்று சரணடைந்துள்ளனர்.
மேகாலயா மாநிலம் காரோ மலைப்பகுதியில் அரசுக்கு எதிராக 2 போராளிகள் குழுக்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தன.

அந்த 2 குழுவை சேர்ந்த மொத்தம் 748 போராளிகள் முதல்வர் முகுல் சங்மா முன்னிலையில் நேற்று "சரண்" அடைந்தனர்.
அனைத்து ஆயுதங்களையும் ஒப்படைத்த அவர்கள், இனிமேல் அமைதி வழியில் வளர்ச்சிப்பணியில் ஈடுபடப்போவதாகவும் எழுதிக் கொடுத்தனர். அப்போது மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications