மே. வங்கத்தை மிரட்டும் மூதாட்டிகள் பலாத்காரம்.. மேலும் ஒரு பாட்டி பலாத்காரம் செய்து கொலை

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா : கன்னியாஸ்திரி ஒருவர் மர்மக் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட பரபரப்பு இன்னும் ஓயாத நிலையில், மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப் பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை அன்று பள்ளி ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த 72 வயது கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போர் காலங்களில் கூட நடக்காத கொடூரம் எனக் கூறி, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி போராட்டங்கள் நடத்தப் பட்டு வருகின்றன. இது தொடர்பான வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்படும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

75-Year-Old Woman's Body Found in West Bengal's Burdwan, 4 Detained

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று மேலும் ஒரு மூதாட்டி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்த்வானில் ஆசிரமம் ஒன்றில் தங்கி இருந்த அந்த 75 வயது மூதாட்டி, கோவிலுக்குச் சென்று திரும்பிய போது மர்மநபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப் பட்டுள்ளார்.

மூதாட்டியின் உடல் ஆசிரமத்திற்கு அருகிலேயே மீட்கப் பட்டுள்ளது. மூதாட்டியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் இதுவரை போலீசார் 4 பேரை பிடித்து விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஒரு வாரத்திற்குள்ளாகவே அடுத்தடுத்து இரண்டு மூதாட்டிகள் பலாத்காரம் செய்யப்பட்டது மேற்கு வங்கத்தில் மம்தா அரசுக்கு நெருக்கடியை அதிகரிக்க செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+