For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்ரீசைலம் கோவிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்:சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு!

Google Oneindia Tamil News

நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது டெம்போ டிரைலர் மோதியதில் சென்னையை சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தமிழகத்தில் களைகட்டும் தேர்தல்.. சேலத்தில் ராகுல் காந்தி-ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம்! தமிழகத்தில் களைகட்டும் தேர்தல்.. சேலத்தில் ராகுல் காந்தி-ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம்!

கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோவிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

ஸ்ரீசைலம் கோவிலில் தரிசனம்

ஸ்ரீசைலம் கோவிலில் தரிசனம்

சென்னை பெரம்பூரை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோவிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். டெம்போ டிரைலர் வாகனம் ஒன்றில் அவர்கள் புறப்பட்டு சென்றனர். பின்னர் ஸ்ரீசைலம் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு தமிழகத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

லாரி மீது மோதிய டெம்போ டிரைலர்

லாரி மீது மோதிய டெம்போ டிரைலர்

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே தாமரமடகு - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது டெம்போ டிரைலர் திடீரென மோதியது. இந்த விபத்து அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அப்பகுதியினருடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

5 பெண்கள் உள்பட 8 பேர் சாவு

5 பெண்கள் உள்பட 8 பேர் சாவு

ஆனால் இந்த கோர விபத்தில் 5 பெண்கள் உள்பட 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 7 பேரை மீட்டு சிசிச்சைக்காக நெல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்துக்கு காரணம் என்ன?

விபத்துக்கு காரணம் என்ன?

டெம்போ டிரைலர் வாகனத்தை ஓட்டிய டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.இந்த விபத்து தொடர்பாக நெல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சென்னை பெரம்பூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

English summary
8 people from Chennai were tragically killed when a tempo trailer collided with a lorry parked on the side of the road near Nellore, Andhra Pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X