பால்குடி மாறாத குழந்தையின் வாயை பொத்தி பலாத்காரம்... மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம்
பால்குடி மாறாத குழந்தை என்றும் பாராமல் ஒன்பது மாத குழந்தையை வாயைப் பொத்தி தூக்கிக் கொண்டு போய் பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
வாராங்கல்: தெலுங்கானா மாநிலம் வாரங்கல் நகரின் அருகே அனுமஹொண்டாவில் உள்ள ஒரு வீட்டில் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டிருந்த ஒரு குடும்பத்தில் இருந்த 9 மாத பச்சிளம் குழந்தையின் வாயை பொத்தி எடுத்துக்கொண்டு போய் பலாத்காரம் செய்திருக்கிறான் ஒரு காமுகன். அவனது செயலால் அந்த பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது.
28 வயதான அந்த கொடியவன் பெயர் பிரவீண் என்பதாகும். ஜெகன் அர்ச்சனா தம்பதியினர் நேற்றிரவு தங்களின் தாபாவின் மாடியில் 9 மாத குழந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவு ஒரு மணிக்கு விழிப்பு வந்து பார்த்த போது பால் பாட்டில் மட்டுமே கிடந்துள்ளது. அருகில் படுத்துக்கிடந்த குழந்தையை காணவில்லை. அதிர்ச்சியடைந்த ஜெகன் தனது மனைவியுடன் சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தார்.

குழந்தை கடத்தல்
குழந்தையை தூக்கிக்கொண்டு போன பிரவீண் அந்த குழந்தையின் வாயை பொத்தி கடத்திக்கொண்டு போனதால் அது அழக்கூட முடியாமல் திணறியுள்ளது. அருகில் இருந்த ஒரு தெருவில் குழந்தையின் விசும்பல் சத்தம் கேட்டுள்ளது. திணறல் அதிகரிக்கவே அங்கு சென்று பார்த்த பார்த்த போது பிரவீண், அந்த பச்சைக் குழந்தையின் வாயைப் பொத்தி சீரழித்துக்கொண்டிருந்தான்.

மூச்சுத்திணறி மரணம்
ஜெகன் போன போது அந்த குழந்தையை போட்டு விட்டு தப்பி ஓடி விட்டான். பதறியடித்துஓடிய ஜெகன் குழந்தையை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறினர்.

கைது செய்த போலீஸ்
தப்பி ஓடிய பிரவீணைப் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து அனுமகொண்டா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவனை கைது செய்த போலீசார், பலாத்காரம், கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார்,அந்த கயவனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கடுமையான தண்டனை
பால் குடிப்பதைக்கூட மறக்காத அந்த ஒன்பது மாத குழந்தையை பலாத்காரம் செய்த கொடியவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் தூக்கு தண்டனை தரவேண்டும் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர். குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்னரே குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்று தெரியவரும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications