பீகாரில் பயங்கரம்.. பள்ளிக்குள் பஸ் புகுந்ததில் 9 மாணவர்கள் பரிதாப பலி!
பீகாரில் பள்ளிக்குள் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து புகுந்த விபத்தில் 9 மாணவர்கள் உயிரிழந்தனர்.
Subscribe to Oneindia Tamil
முசாபர்பூர்: பீகாரில் பள்ளிக்குள் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து புகுந்த விபத்தில் 9 மாணவர்கள உயிரிழந்தனர்.
பீகார் மாநிலம் முசாபர்பூரில் பள்ளி வளாகத்திற்குள் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து புகுந்தது. இதில் பள்ளி வளாகத்தில் அமர்ந்திருந்த 9 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 24 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
விபத்துக்குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications