சூரத்தில் 8 நாட்கள் டார்ச்சர்: தொடர் பலாத்காரம்: அடையாளம் தெரியாத 9 வயது சிறுமி கொலை
சூரத்தில் 8 நாட்களாக துன்புறுத்தப்பட்டு தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்ட அடையாளம் தெரியாத 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார்.
சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் 9 வயது சிறுமி, 8 நாட்களாக அடைக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமி யாரென்ற விவரங்களை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சூரத்தில் உள்ள பேஸ்தான் பகுதியில் ஒரு சிறுமியின் சடலம் கிடந்ததை அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் பார்த்துவிட்டு கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

80 -க்கும் மேற்பட்ட காயங்கள்
5 மணி நேர பிரேத பரிசோதனைக்கு பின்னர் அந்த சிறுமி 8 நாட்களாக துன்புறுத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. அவரது உடலில் 80-க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது.

மர ஆயுதத்தால் தாக்குதல்
மேலும் அந்த சிறுமியின் அந்தரங்க உறுப்புகளிலும் காயங்கள் கிடந்தன. 8 நாட்கள் ஒரு இடத்தில் வைத்து துன்புறுத்தப்பட்ட அந்த சிறுமியின் உடலில் ஏற்பட்ட காயங்கள் மரத்தினாலான ஆயுதத்தால் ஏற்பட்டவை என்றும் தெரியவந்தது.

சிறுமி உடல்
அவர் உடலில் ஏற்பட்ட காயங்கள் அனைத்து ஒன்று முதல் 7 நாட்களுக்கு முன்னதாக நடந்தவை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி கூறுகையில், காலையில் நடைப்பயிற்சி செல்லும் பொதுமக்கள் சிறுமி உடல் கிடந்தது குறித்து தகவல் கொடுத்தனர்.

அதிர்ச்சி சம்பவம்
அந்த சிறுமி யாரென்ற அடையாளம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார் அவர். காஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 16 வயது சிறுமி பாஜக எம்எல்ஏவால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications