90 வயது மூதாட்டி பலாத்காரம்: தானாக வழக்கை எடுத்துக் கொண்ட ம.பி. ஹைகோர்ட்
போபால்: மத்திய பிரதேசத்தில் 90 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி செய்தித்தாள்களில் பார்த்துவிட்டு அம்மாநில உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள குடிசை பகுதியில் 90 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 30ம் தேதி இரவு குக்கு(52) என்பவர் அந்த மூதாட்டியை இரக்கமின்றி பாலியல் பலாத்காரம் செய்தார்.

இந்த செய்தி செய்தித்தாள்களில் வெளியானது. இதை பார்த்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து மூதாட்டியின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கடந்த 2ம் தேதி இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஜய் மாணிக்ராவ் கன்வில்கர், நீதிபதி சஞ்சய் யாதவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த அவர்கள் இது தொடர்பாக 48 மணிநேரத்திற்குள் பதில் அளிக்குமாறு மாநில உள்துறை செயலாளர், எஸ்.பி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதற்கிடையே போலீசார் குக்குவை கைது செய்தனர்.
வீட்டில் தனியாக இருக்கும் பெண் குழந்தைகள், இளம்பெண்கள் முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையாக உள்ளது.












Click it and Unblock the Notifications