கழுத்தை அறுத்து.. ஆசிட் ஊற்றி.. நரிக்குறவர் சிறுமியை சீரழித்த ‘தாய் மாமன்’! அதிர்ந்து போன ஆந்திரா!
அமராவதி : ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்ததோடு சிறுமியின் கழுத்தை அறுத்து வாயில் ஆசிட் ஊற்றிய கொடூர சம்பவம் இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் வன்கொடுமை சம்பவங்களை சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா, ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களையும் பெற்றோர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆந்திராவில் அதிர்ச்சி
பெண்கள் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள், தலித் குழந்தைகள் பாலியல் சம்பவங்களை துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் நிகழ்வுகள் தான் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றுள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்தின் அருகே உள்ள நெல்லூர் புஜபூஜ நரிக்குறவர் காலனி பகுதியில் 200க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமை
அந்தப் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள ஜில்லா பரிசத் உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற சிறுமி மாலையில் வீடு திரும்பினார் அவர்களது பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில் அவர் தனியாக இருப்பதை அறிந்த அந்த சிறுமியின் தாய் மாமன் நாகராஜ் என்பவர் வீட்டிற்கு வந்து சிறுமியிடம் பேச்சு கொடுத்துள்ளார்.

ஆசிட் ஊற்றி கொடூரம்
சிறிது நேரத்தில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் நாகராஜ் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தனது வீட்டில் இருக்கும் கழிப்பிடத்திற்குச் சென்று கதவை மூட முயற்சித்து இருக்கிறார். இதனால் கோபமடைந்த நாகராஜ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சிறுமியின் கழுத்தை அறுத்துள்ளார்.

அதிரடி கைது
மேலும் கழிப்பறையில் இருந்த ஆசிட்டை எடுத்து சிறுமியின் வாயிலும் ஊற்றி இருக்கிறார் இதனால் சிறுமி அலறிய நிலையில் அவரது சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்தோர் சிறுமியை மீட்டு நெல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் நாகராஜன் கைது செய்துள்ளனர்
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications