70 வயது பாட்டியை வீடு புகுந்து துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த கொடூரன்!
ஷாம்லி: உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு 70 வயதான பெண்மணி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி. மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் முசாபர்நகர் அருகே உள்ள ஷாம்லி என்ற இடத்தில் அம்மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
அங்கு செவ்வாய்க்கிழமையன்று வீடு புகுந்த ஒரு நபர் துப்பாக்கியைக் காட்டி பாட்டியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் மிதந்த பாட்டியை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விவிசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் போலீசார் விசாரணையில் பலாத்காரம் செய்த நபர் சுர்னா கிராமத்தைச் சேர்ந்தவன் என்று தெரிய வந்துள்ளது. அந்த நபரைப் போலீாஸார் தேடி வருவதாக கூடுதல் எஸ்.பி வி.பி.மிஸ்ரா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications