மைசூர் கோர்ட் வளாகத்தில் டாய்லெட்டில் குண்டு வெடிப்பு.. கதவுகள் உடைந்து சிதறின
மைசூர்: கர்நாடக மாநிலம் மைசூரிலுள்ள கோர்ட் கழிவறையொன்றில் வெடிகுண்டு வெடித்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மைசூர் நகரின் மையப்பகுதியான, லட்சுமிபுரத்திலுள்ள மாவட்ட கோர்ட் செயல்படுகிறது. இதன், கழிவறையில் இன்று மாலையில் திடீரென பயங்கர சத்தத்தோடு வெடி சத்தம் கேட்டது.
வெடிகுண்டு வெடித்ததை போன்ற பயங்கர சத்தம் வந்ததாக கோர்ட்டில் இருந்த வக்கீல்கள், பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த சம்பவத்தில் நல்லவேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதேநேரம், கழிவறைகளின் கதவுகள், தரை டைல்ஸ் உடைந்து சுக்குநூறாகியுள்ளன.
குண்டு சத்தம் கேட்கும் முன்பாக, கழிவறை பகுதியிலிருந்து ஒரு நபர் சந்தேகத்திற்கிடமாக வெளியே ஓடியதாக நேரில் பார்த்த சிலர் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர்.
காவல்துறை, வெடிகுண்டு சோதனை நிபுணர்கள், மோப்ப நாய் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான வகையில், மேலும் இரு பொட்டனங்கள் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.