வகுப்பறையில் ஆசிரியர் கேட்ட சின்ன கேள்வி.. கோபத்தில் தலையிலேயே குத்திக்கொன்ற 11ம் வகுப்பு மாணவன்
கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் சீருடை அணியாமல் வந்ததை கண்டித்ததால் வகுப்பறையில் ஆசிரியரை மாணவர் ஒருவர் குத்திக்கொன்றுள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆசிரியர்களை மாணவர்கள் தாக்கும் சம்பவங்கள் ஆங்காங்க நடந்து கொண்டே இருக்கின்றன. தங்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியரை விரோதிகளாக பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. கண்டிப்பு காட்டும் ஆசிரியர்கள் மீது கோபத்தில் இருக்கும் மாணவர்கள் சிலர் தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. சில நேரங்களில் ஆசிரியர்களை மாணவர்கள் கொலை செய்யும் நிகழ்வும் நடக்கிறது.

சிறு சங்கடடங்களை கூட தாங்கி கொள்ள முடியாமல் வளரும் குழந்தைகள், தோல்விகளை பக்குவமாக கையாளத்தெரியாத குழந்தைகள், நினைத்ததை அடைய தவறான வழிக்கு செல்கிறார்கள். மிகவும் செல்லமாக வளர்க்கப்படும் குழந்தைகளே பின்னாளில் மிகவும் மோசமான நிலையை அடைகிறார்கள். தங்களுக்கு எதிராக யார் பேசினாலும், செயல்பட்டாலும் ஆத்திரத்தில் எல்லை மீறுகிறார்கள்.. அப்படித்தான் ஒரு சம்பவம் அஸ்ஸாமில் நடந்துள்ளது.
அஸ்ஸாமின் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் இயங்கும் சாய் விகாஷ் அகடாமி பள்ளியில் சம்பத்தன்று வழக்கம் போல வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு 11-ம் வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவர் சீருடை அணியாமல் சாதாரண உடையில் பள்ளிக்கு வந்திருக்கிறார்.. என்னப்பா, சீருடை அணியாமல் பள்ளிக்கு வந்தது ஏன் கேட்டு அவரது வகுப்பாசிரியர் (அறிவியல் ஆசிரியர்) ராஜேஷ் பாபு பிஜ்வாடா அவரை கண்டித்தார். அத்துடன் வகுப்பில் இருந்து வெளியே தயவு செய்து செல்லுமாறு பணிவாகவே ஆசிரியர் ராஜேஷ் கூறியிருக்கிறார். ஆனால் மாணவர் அங்கேயே நின்றார். இதனால் கோபமடைந்த ஆசிரியர் ராஜேஷ் சத்தமாக அவரை வெளியே போ என்று கூறினார்.
இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அந்த மாணவர், தான் உடலில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென ஆசிரியரின் தலையில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த ஆசிரியர் ராஜேஷ் பாபு பிஜ்வாடா வகுப்பறையிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதைப்பார்த்து பிற மாணவர்கள் அலறியடித்து ஓடினார்கள்.
பின்னர் அந்த ஆசிரியரை சக ஆசிரியர்களும், மாணவர்களும் சேர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியரை கத்தியால் குத்தி கொன்ற மாணவனை கைது செய்தனர்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications