பாடல் ஒலிபரப்பியதில் பிரச்சனை.. ஹோலி கொண்டாட்டத்தின் போது கொல்லப்பட்ட தலித் இளைஞர்
ராஜஸ்தானில் ஹோலி கொண்டாட்டத்தின் போது தலித் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஹோலி கொண்டாட்டத்தின் போது தலித் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். ஆல்வார் என்ற பகுதியில் இந்த மோசமான கொலை நடந்து இருக்கிறார்.
எல்லோரும் ஒன்றாக ஹோலி கொண்டாடியா போது நடைபெற்ற கைகலப்பில் இந்த கொலை நடந்து உள்ளது. கொல்லப்பட்டவர் பெயர் நீராஜ் ஜாதவ்.
இவருக்கு 16 வயது மட்டுமே நிரம்பி இருக்கிறது. இவரது நண்பர்கள் பலருக்கு மோசமாக காயம் ஏற்பட்டு இருக்கிறது.

பாடல்
இரண்டு பிரச்னை காரணமாக கொலை நடந்துள்ளது. தலித் இளைஞர்கள் மற்ற சாதி இருக்கும் கிராமத்திற்குள் சென்று இருக்கிறார்கள். அடுத்ததாக அங்கு தலித் இளைஞர்களுக்கு சாதகமான பாடல் எதோ பாடப்பட்டு இருக்கிறது.

மரணம்
இந்த பாடலை நிறுத்த சொன்னதில் சண்டை வந்துள்ளது. இதில் நீராஜ் நான்கு பேரால் மோசமாக தாக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.

பெரிய போராட்டம்
இதனால் அங்கே பெரிய போராட்டம் உருவாகி இருக்கிறது. அவரது உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் போராடி இருக்கிறார்கள். அதேபோல் அந்த கிராமத்து மக்கள் உடனடியாக இதில் நடவடிக்கை எடுக்கும் படி போராடி இருக்கிறார்கள்.

கைது
இந்த சம்பவத்தில் 3 பேர் மோசமாக காயம் அடைந்துள்ளனர். இதில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் 6 பேர் வரை இதில் சம்பந்தப்பட்ட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications