துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸால் வந்த விணை.. டெல்லியில் ஒருவர் கைது!
டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸ் பயன்படுத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி: டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸ் பயன்படுத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசால் கைது செய்யப்பட்ட இவர் தற்போது பெயிலில் வெளியே வந்துள்ளார்.
பிரகாஷ் குமார் என்ற நபர் தர்மசாலாவில் இருந்து டெல்லி நோக்கி சென்ற பேருந்தில் பயணித்து இருக்கிறார். இவர் பாதி வழியில் தன்னுடைய சாக்ஸை கழட்டி பேருந்தில் வைத்து இருக்கிறார்.

சாக்ஸின் நாற்றம் தாங்காமல் பக்கத்தில் இருந்த பயணி அவரது சாக்ஸை தூக்கி வெளியே ஏறிய சொல்லி இருக்கிறார். இல்லையென்றால் அவரது பைக்குள் வைத்துக் கொள்ளும் படி கூறியிருக்கிறார்.
இதை கேட்காத அவர் அந்த பயணியிடம் சண்டை போட்டு உள்ளார். இதையடுத்து அந்த வழியில் இருந்த போலீஸ் நிலையம் ஒன்றில் பேருந்து நிறுத்தப்பட்டது. அந்த பக்கத்து சீட் பயணி பிரகாஷ் குமார் மீது இதுகுறித்து புகார் அளித்தார்.
இதையடுத்து பிரகாஷ் கைது செய்யப்பட்டார். பின் சில மணி நேரத்தில் அவர் பெயிலில் விடுவிக்கப்பட்டார். தற்போது பிரகாஷ் தனது சக பயணி மீது வழக்கு தொடுத்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications