பெற்ற குழந்தைகளை வெறி பிடித்து தாக்கும் தந்தை.. ராஜஸ்தானில் அதிர்ச்சி.. வைரலாகும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பெற்ற குழந்தைகளை தந்தை கொடூரமாக தாக்கும் பகீர் வீடியோ வெளியாகியுள்ளது.

குழந்தைகள் மீது பெற்றோரே கொடூரத் தாக்குதல் நடத்தும் காட்சிகள் அண்மைக் காலமாக அதிகளவில் வெளியாகி வருகின்றன.

இந்த வீடியோக்கள் அடிப்படையில் குழந்தைகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்துபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தானில் தந்தை ஒருவர் தனது 2 குழந்தைகளையும் சரமாரியாக தாக்கும் கொலை வெறி வீடியோ வைரலாகியுள்ளது.

இரண்டு குழந்தைகள்

இரண்டு குழந்தைகள்

ராஜஸ்தான் மாநிலம் ராஜாசமாத்தைச் சேர்ந்தவர் ஜெயின் சிங். இவருக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

மகனை தொங்கவிட்ட தந்தை

மகனை தொங்கவிட்ட தந்தை

இந்நிலையில் தனது 2 குழந்தைகளையும் ஜெயின் சிங் சரமாரியாக அடித்து துன்புறுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் தனது 5 வயது மகனை கயிற்றில் கட்டி தொங்கவிட்டுள்ளார் ஜெயின் சிங்.

அங்கும் இங்குமாக தவிப்பு

அங்கும் இங்குமாக தவிப்பு

மேலும் தனது 3 வயது மகளையும் ஜெயின் சிங் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு கொடூரமாக அடிக்கிறார். வலி தாங்க முடியாமல் அந்த குழந்தை அங்கும் இங்குமாக தவித்து ஓடுகிறது.

துடிக்கும் குழந்தை

துடிக்கும் குழந்தை

இதனைக் கண்டு கொஞ்சமும் மனம் இறங்காத ஜெயின் அந்த குழந்தையை தூக்கிப்போட்டு அடிக்கிறார். இதில் வலி தாங்க முடியாமல் அந்த குழந்தை துடிக்கிறது.

கயிறில் தொங்கவிடப்பட்ட மகன்

கயிறில் தொங்கவிடப்பட்ட மகன்

இதைத்தொடர்ந்து கயிறில் கட்டி தொங்கவிட்டுள்ள தனது மகனையும் அந்த தந்தை அடிக்கிறார். வலிதாங்க முடியாமல் இரண்டு குழந்தைகளும் கதறி அழுகின்றனர்.

கைது செய்த போலீஸ்

கைது செய்த போலீஸ்

குழந்தைகளை ஜெயின் சிங் தாக்குவதை அவரது சகோதரர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவின் அடிப்படையில் ஜெயின் சிங் மற்றும் அவரது சகோதரை போலீசார் கைது செய்தனர்.

ஆடை அழுக்கானதால்

ஆடை அழுக்கானதால்

இது குறித்து நடத்திய விசாரணையில் குழந்தைகள் மண்ணில் விளையாடி ஆடை முழுவதும் அசுத்தம் ஆக்கியதால் அடித்ததாக ஜெயின் சிங் கூறினார். இந்த கொடூர சம்பவத்தை குழந்தையின் தாய் உட்பட அனைவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அதிர்ச்சி சம்பவம்

அதிர்ச்சி சம்பவம்

ஜெயின் மீதுள்ள அச்சத்தால் யாரும் அவரை தடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஜெயின் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தைகளை இரக்கமின்றி தந்தையே தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+