சூதுகவ்வும் ஸ்டைலில் பேங்கை கொள்ளையடிக்க பள்ளி நடத்திய இளைஞர்.. ரூ. 1.04 கோடி கொள்ளை!
வங்கிகளைக் கொள்ளையடிப்பது குறித்து பள்ளி நடத்திய இளைஞரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பாட்னா : பீகாரில் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்காக வங்கிகளைக் கொள்ளையடிப்பது எப்படி என்ற பள்ளியை நடத்தி, ரூ. 1.04 கோடியை கொள்ளையடித்த இளைஞரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகாரை சேர்ந்த 26 வயது இயற்பியல் பட்டதாரி பங்கஜ் சஹானி. வேலையில்லாமல் அவதிப்பட்டு வந்த இவர், தனது பணத்தேவைகளுக்காக வங்கிகளைக் கொள்ளையடிப்பது எனத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த 2010, 2012ம் ஆண்டுகளில் ரூ. 1.04 கோடியை ஏடிஎம் மூலம் கொள்ளையடித்துள்ளார்.
பீகார் மட்டுமின்றி ஜார்கண்ட், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் மற்றும் நேபாளத்திலும் கூட ஏடிஎம் கொள்ளையில் இவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

திருடுவது பற்றி பாடம்:
வங்கி மற்றும் ஏடிஎம்களை கொள்ளையடிப்பதில் கை தேர்ந்த திருடனான பங்கஜ், தான் கற்ற திருட்டுக் கலையை வேலையில்லாமல் அவதிப்பட்டு வந்த மேலும் சில இளைஞர்களுக்கு கற்றுத்தர விரும்பியுள்ளார். இதற்காக பள்ளி ஒன்றைத் தொடங்கிய அவர், இதுவரை 55க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு, எப்படி வங்கிகளில் கொள்ளை அடிப்பது, ஏமாற்றி கடன் வாங்குவது, ஏடிஎம் கொள்ளை அடிப்பது போன்றவற்றை கற்றுத் தரும் பள்ளிக்கூடத்தை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடத்தத் தொடங்கியுள்ளார்.

விசாரணை:
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், பங்கஜைக் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதுவரை ஏடிஎம் மூலம் கொள்ளை அடித்த பணம் எவ்வளவு என்பது தனக்கே தெரியவில்லை என பங்கஜ் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். ஆனாலும், இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ரூ. 1.04 கோடி பணத்தை பங்கஜ் கொள்ளையடித்திருப்பார் எனத் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து பங்கஜிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
இது ஒருபுறம் இருக்க, பங்கஜின் திருட்டு மாணவர்கள் பற்றிய விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். அவர்களால் இந்தியாவின் பல இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிர்ச்சி:
சூது கவ்வும் படத்தில் நான்கு இளைஞர்களுக்கு கொள்ளையடிப்பது எப்படி என விஜய் சேதுபதி வகுப்பெடுப்பாது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். தற்போது அதே ஸ்டைலில் இளைஞர்களுக்கு கொள்ளையடிப்பது குறித்து பள்ளி நடத்தி இளைஞர் ஒருவர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications