எல்லாம் போச்சு.. இன்னும் ட்ரம்ப்பை கட்டிப்பிடியுங்கள் 'நரேந்திர பாய்'.. மோடியை வாரும் ராகுல் காந்தி
டெல்லி: தீவிரவாத விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை சுட்டிக் காட்டி பிரதமர் நரேந்திர மோடியை சாடியுள்ளார் காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி.
இதுகுறித்து ஒரு செய்தியை டிவிட் செய்துள்ள ராகுல் காந்தி, அதில், நரேந்திரபாய், தீவிரவாதிகளின் முக்கிய தலைவன் இப்போது ஃப்ரீயாகிவிட்டான். லஷ்கர்-இ-தொய்பாவுக்கு பாகிஸ்தான் நிதி உதவி அளிப்பதாக கூறுவதை டிரம்ப் ஏற்கவில்லை. உங்களின் கட்டிப்பிடி ராஜாங்க நடவடிக்கை தோற்றுவிட்டது. உடனடியாக இன்னும் அதிக கட்டிப்பிடி தேவைப்படுகிறது. இவ்வாறு ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

இந்த டிவிட் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. சமீபகாலமாக டிவிட்டரில் ராகுல் காந்தி பிரதமர் மோடியை அதிகம் வாரி வருவது குறிப்பிடத்தக்கது.
Narendrabhai, बात नहीं बनी. Terror mastermind is free. President Trump just delinked Pak military funding from LeT. Hugplomacy fail. More hugs urgently needed.https://t.co/U8Bg2vlZqw
— Office of RG (@OfficeOfRG) November 25, 2017












Click it and Unblock the Notifications