ரயில்வே வாரியத் தலைவராக ஏ.கே.மிட்டல் மீண்டும் நியமனம் - மத்திய அரசு
டெல்லி: இந்திய ரயில்வே வாரியத் தலைவராக ஏ.கே. மிட்டலை மீண்டும் நியமனம் செய்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. .
1976ம் ஆண்டு ரயில்வே பணியில் சேர்ந்த ஏ.கே. மிட்டல் வடக்கு ரயில்வேயில் தலைமை பொருள் மேலாளராக பணிபுரிந்துள்ளார். தென் மேற்கு ரயில்வே தலைமையகம் ஹூப்ளியில் பொதுமேலாளராக பணியாற்றியுள்ளார்.

கடந்த 2014-ஆம் ரயில்வே வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த மாதத்துடன் அவர் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் ஏ.கே.மிட்டலின் பதவிக் காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதையடுத்து, வரும் 2018-ஆம் ஆண்டு வரை ரயிலவே வாரியத்தின் தலைவராக அவர் நீடிப்பார்.
இவரின் பதவிகாலத்தை நீட்டிப்பது குறித்து மத்திய அமைச்சரவை நியமனக்குழு பரிசிலித்து வந்தது. இதனையடுத்து அவருக்கு அனைத்து உறுப்பினர்களும் அதரவு அளித்த நிலையில் அவரை இப்பணிக்கு மத்திய அரசு மீண்டும் நியமித்துள்ளது












Click it and Unblock the Notifications