ரயில்வே வாரியத் தலைவராக ஏ.கே.மிட்டல் மீண்டும் நியமனம் - மத்திய அரசு
டெல்லி: இந்திய ரயில்வே வாரியத் தலைவராக ஏ.கே. மிட்டலை மீண்டும் நியமனம் செய்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. .
1976ம் ஆண்டு ரயில்வே பணியில் சேர்ந்த ஏ.கே. மிட்டல் வடக்கு ரயில்வேயில் தலைமை பொருள் மேலாளராக பணிபுரிந்துள்ளார். தென் மேற்கு ரயில்வே தலைமையகம் ஹூப்ளியில் பொதுமேலாளராக பணியாற்றியுள்ளார்.
கடந்த 2014-ஆம் ரயில்வே வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த மாதத்துடன் அவர் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் ஏ.கே.மிட்டலின் பதவிக் காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதையடுத்து, வரும் 2018-ஆம் ஆண்டு வரை ரயிலவே வாரியத்தின் தலைவராக அவர் நீடிப்பார்.
இவரின் பதவிகாலத்தை நீட்டிப்பது குறித்து மத்திய அமைச்சரவை நியமனக்குழு பரிசிலித்து வந்தது. இதனையடுத்து அவருக்கு அனைத்து உறுப்பினர்களும் அதரவு அளித்த நிலையில் அவரை இப்பணிக்கு மத்திய அரசு மீண்டும் நியமித்துள்ளது