மும்பை ரயில் பாலம் விபத்தில் சோகம்.. மகப்பேறு விடுமுறைக்கு பிறகு பணிக்குச் சென்ற பெண் பலி
மகப்பேறு விடுமுறைக்கு பிறகு மீண்டும் பணியில் சேர்ந்த பெண் ஒருவர் மும்பை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான பரிதாபம் நடந்தேறியுள்ளது.
மும்பை: மகப்பேறு விடுமுறைக்கு பிறகு மீண்டும் பணியில் சேர்ந்த பெண், மும்பை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 22 பேரில் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.
மும்பையில் கடந்த சில நாள்களுக்கு முன் அடைமழை பெய்து அந் நகரமே வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் மும்பையில் நேற்று பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது.

காலை 10.30 மணியளவில் எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் மழையால் ஏராளமான மக்கள் ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர். அப்போது ரயில் நிலையத்தில் மின்கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. இதனை அறிந்த மக்கள் ரயில் நிலைய மேம்பாலத்தில் முண்டியடித்து கொண்டு சென்றனர்.
மகப்பேறு விடுமுறை...
அப்போது ஏற்பட்ட நெரிசலில் 22 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் 30 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் அந்த 22 பேரில் உயிரிழந்த தெரசா பெர்னான்டஸ் மகப்பேறு விடுமுறைக்கு பிறகு மீண்டும் பணிக்கு சென்றவர் என்று தெரியவந்தது.
மீண்டும் பணி
தாதரில் உள்ள பவானி சங்கர் சாலையில் வசித்து வருபவர் ரத்தன் ரதோடு. இவரது மனைவி தெரசா (39). இவர்களுக்கு 8 வயதிலும், 9 மாதத்திலும் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றி வந்த தெரசா பேறு கால விடுப்பில் இருந்தார்.
கூட்ட நெரிசல்
இந்த விடுப்புகள் முடிந்து நேற்று பணிக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். அதன்படி அவர் நேற்று கிளம்பிய போது மழை பெய்தது. இதற்கு ஒதுங்குவதற்காக ரயில் நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் அவர் உயிரிழந்துவிட்டார்.
குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு...
இதுகுறித்து ரத்தன் ரதோடும் தெரசா பணியாற்றும் நிறுவனத்திலேயே வேலை பார்க்கிறார். அவர் கூறுகையில், அப்போது குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு பணிக்கு செல்ல புறப்பட்டார். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழக்க நேரிட்டது என்றார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications