பச்சிளம் குழந்தையை சாக்குப்பையில் கட்டி வீசி எறிந்த தாய்- போலீஸ் விசாரணை
தாளவாடி: கர்நாடக எல்லையில் சாக்கு மூட்டையில் பச்சிளங்குழந்தையின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியிலுள்ள கல்மண்டிப்புரம் அருகேயுள்ள தொட்டமுதுகரை தண்ணீர் தொட்டி அருகே, பிறந்து 10 நாளே ஆன பெண் குழந்தை இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்து.
அதிகாரிகள் ஆய்வு:
இதையடுத்து, தாளவாடி போலீஸார் மற்றும் பனஹள்ளி கிராம நிர்வாக அலுவலர் சதீஸ்கமல் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
சாக்கு மூட்டையில் பிணம்:
சாக்கு மூட்டையில் கிடந்த பெண் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
பல்வேறு கோணத்தில் விசாரணை:
இறந்துகிடந்த குழந்தை உயிருடன் வீசப்பட்டதா ? அல்லது சடலமாக வீசப்பட்டதா ? எனவும், மலைப்பகுதியிலுள்ள கிராமங்களில் கருவுற்றிருந்த பெண்கள் குறித்த விபரங்களை போலீஸார் சேகரிப்பதுடன், பல்வேறு கோணத்தில் பொதுமக்களிடம் விசாரித்து வருகின்றனர்.
போலீசார் வழக்குபதிவு:
இதுகுறித்து, பனஹள்ளி கிராம நிர்வாக அலுவலர் சதீஸ்கமல் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில் தாளவாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.