பேஸ்புக், டிவிட்டரில் மூழ்கும் இளைஞர்கள் மத்தியில் பெங்களூர் இளைஞர் என்ன செய்தார் தெரியுமா?
பெங்களூரில் உள்ள 3 ஏரிகளை தனியொருவராக இருந்து சுத்தம் செய்து வெற்றிகண்டுள்ளார் பெங்களூர் இளைஞன்.
பெங்களூர்: பெங்களூரில் உள்ள 3 ஏரிகளை இயற்கையான முறையில் சுத்தம் செய்து அதில் வெற்றி கண்டுள்ளார் பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
கட்டட கலை நிபுணரான ஹிமாஷவ் ஆர்தீவ் (28) பெங்களூரைச் சேர்ந்தவராவார். சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயம், வாழ்க்கை முறை குறித்த சமூக ஆர்வலரான இவர், அண்மையில் இயற்கை முறைகளை பயன்படுத்தி ஏரிகளை சுத்தம் செய்யும் பணியை பற்றிய ஆய்வுக் கட்டுரையை படித்தார்.

அதாவது பிவிசி பைப்புகளில் மிதவை போன்ற ஒரு அமைப்பை கட்டமைத்து அதில் கழிவுகளை சுத்தப்படுத்தும் தன்மை கொண்ட நைட்ரேட்டுகள், பாஸ்பேட், சல்பேட்டுகள் ஆகியவை அடங்கிய ஒரு கலவையை அதில் இடவேண்டும். இந்த முறை கனடாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மிதவையானது தண்ணீரின் தரத்தை அதிகரிப்பதோடு, ஏரியில் உள்ள செடிகள், விலங்குகளின் வாழ்க்கையை மேம்படுத்தும். ஒவ்வொரு சில குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை செடிகளை மறுபடியும் நடவேண்டும்.
இது போன்ற செயல்முறை செய்து அந்த மிதவையை கடந்த 2016-ஆம் ஆண்டு புட்டஹள்ளி ஏரியில் மிதக்கவிட்டார். இதனால் இந்த ஏரியில் உள்ள நீர் தூய்மை அடைந்ததை கண்டார். இதே முறை பயன்படுத்தி கைகொண்டஹள்ளி ஏரி மற்றும் ஜக்கூர் ஏரி ஆகிய ஏரிகளையும் அவர் சுத்தம் செய்து வெற்றி கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தனது பயோமி என்விரான்மன்டல் டிரஸ்ட் (Biome Environmental Trust) மூலம் மேலும் பல ஏரிகளை சுத்தம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். இவர் செய்த அந்த மிதவையை தயார் செய்ய வெறும் ரூ.3000 மட்டுமே ஆகும். குறைந்த செலவில் எளிமையாக முறையில் குறிப்பாக ஆட்கள், இயந்திரங்களை பயன்படுத்தாமல் ஏரியை சுத்தம் செய்த ஆர்தீவின் எளிமையான செய்ல்பாடுகள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications