‛திரு.திருடன் அவர்களே’.. சோஷியல் மீடியா போஸ்ட்டால் மீண்டும் கிடைத்த பைக்! திருடனின் நெகிழ்ச்சி செயல்
சூரத்: பைக்கை திருடி சென்ற மர்ம நபர், சில நாட்களுக்கு பிறகு மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டு சென்றுள்ள சம்பவம் குஜராத்தில் பேசுபொருளாகியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தில், பரேஷ் படேல் எனும் இளைஞர் புதியதாக வாங்கிய தனது பைக்கை, வழக்கம் போல வீட்டிற்கு வெளியில் நிறுத்தி வைத்திருக்கின்றார். ஆனால் சில நாட்களுக்கு முன்னர், இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இந்த பைக்கை லாவகமாக திருடி சென்றிருக்கிறார். பைக்கின் விலை சுமார் ரூ.1.5 லட்சம் வரை இருக்கும். பைக் திருடப்பட்டது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால் அந்த இளைஞர் இது குறித்து போலீஸில் புகார் ஏதும் கொடுக்கவில்லை. மாறாக, பைக்கை மீட்க மற்றொரு முயற்சியை கையாண்டார்.

அதாவது தனது பைக் திருடப்பட்டது குறித்து சோஷியல் மீடியாவில் உருக்கமாக பதிவிட்டார். "திரு.திருடன் அவர்களே, நீங்கள் என்னிடமிருந்த ஒரேயொரு பைக்கையும், அதிலிருந்த ஆர்.சி புக்கையும் எடுத்து சென்றுவிட்டீர்கள். எனக்கு இந்த பைக்கை தவிர ஓட்டுவதற்கு என ஒரேயொரு ஓட்டை சைக்கிள்தான் இருக்கிறது. பரவாயில்லை, இதை வைத்து என்னுடைய வேலையை என்னால் செய்துக்கொள்ள முடியும்" என்று எழுதி, அத்துடன் திருடப்பட்ட பைக்கின் போட்டோவையும் பதிவிட்டிருந்தார்.
நாட்கள் சென்றன. சரியாக 5 நாட்களுக்கு பின்னர், காலை பொழுதில் வீட்டின் வாசலுக்கு வந்து பார்த்தபோது திருடுபோன பைக் நின்றிருக்கிறது. பரேஷ் பட்டேலால் இந்த ஆச்சரியத்தை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. பொதுவாக இப்படி பைக்கை திருடுபவர்கள், அதை குற்ற செயலுக்கு பயன்படுத்திவிட்டு, தனித்தனியாக பிரித்து விற்பனை செய்துவிடுவார்கள். இல்லையெனில் நம்பர் பிளேட்டை மாற்றி தங்களது தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்வார்கள். ஆனால் அதிசயமாக பைக்கை திருடிய நபர், அதை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.
இது குறித்து பைக்கின் உரிமையாளரான படேல் கூறுகையில், "இந்த பைக்கை வாங்குவதற்கு நான் மிகவும் சிரமப்பட்டேன். எல்லா இளைஞர்களை போலவும் நானும் என்னுடைய பைக் மீது மிகவும் பிரியமாக இருந்தேன். ஆனால் ஒரு நாள் காலையில் அது காணாமல் போயிருந்தது. என்னால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சிசிடிவி காட்சிகளை செக் செய்ததில் பைக் திருடப்பட்டிருப்பது கன்ஃபார்ம் ஆனது. இருந்தாலும் இது குறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்காமல், வேறு வழியில் மீட்க வேண்டும் என்று விரும்பினேன்.
எனவே பைக்கை திருடிய நபருக்கு உருக்கமாக கடிதத்தை எழுதினேன். என்னுடைய மனதில் என்னெவல்லாம் தோன்றியதோ அதை அப்படியே எழுதினேன். முடிவில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. பைக் எனக்கு மீண்டும் கிடைத்துவிட்டது" என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். இந்த சம்பவம் சூரத் மட்டுமின்றி குஜராத் முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications