மணிப்பூர் தாக்குதல்.. சிக்கிய நாகாலாந்து பயங்கரவாதத் தலைவனிடம் என்.ஐ.ஏ. விசாரணை..
டெல்லி : மணிப்பூர் மாநிலத்தில் 18 ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, நாகாலாந்து பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.
மணிப்பூர் மாநிலம் சண்டெல் பகுதியில், கடந்த 4 ஆம் தேதி நாகாலாந்தை தனி நாடான கோரும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர்கள் 18 பேர் உயிரிழந்தது தொடர்பாக, என்ஐஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கான சதி திட்டத்தில் ஈடுபட்டதாக என்.எஸ்.சி.என்.-(கப்லாங் பிரிவு) என்ற நாகாலாந்து பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 40 வயதான கும்லோ அபி அனால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றொரு வழக்கு தொடர்பாக, அவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தார். மணிப்பூர் தாக்குதலில் இவருக்குள்ள தொடர்பை மறைப்பதற்காக, இவர் வேண்டுமென்றே அந்த வழக்கில் கைதானது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை அபி அனாலை என்ஐஏ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மணிப்பூர் தாக்குதலில் 23 நாகாலாந்து பயங்கரவாதிகள் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. 2 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீதமுள்ள 21 பேரில் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகள் மூன்று குழுக்களாக வந்து தாக்குதலில் ஈடுபட்டதும், மியான்மர் எல்லையில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் இருந்து அவர்கள் வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
ஏற்கெனவே சரணடைந்திருந்த நாகாலாந்து பயங்கரவாதிகளிடம் மேற்கொண்ட விசாரணைகளில், மணிப்பூர் தாக்குதல் தொடர்பான முக்கியத் தகவல்கள் என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்தன.
நாகாலாந்து பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக, நாகாலாந்து, மணிப்பூர் மாநிலங்களை ஒட்டியுள்ள மியான்மர் நாட்டு எல்லைப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 2 நாகாலாந்து பயங்கரவாதிகளின் முகாம்களை ராணுவத்தினர் அழித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications