36 மணி நேரம் உயிருக்கு போராடினேன்.. பெங்களூரில் 6 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் வாக்குமூலம்
பெங்களூரில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்யும் பெண் ஒருவரை ஆறு ஆண்கள் சேர்ந்து வன்புணர்வு செய்து உள்ளனர்.
Recommended Video

பெங்களூர்: பெங்களூரில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்யும் பெண் ஒருவரை ஆறு ஆண்கள் சேர்ந்து வன்புணர்வு செய்து உள்ளனர். இந்த சம்பவம் நடந்த பின் அந்த பெண் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார்.
பெங்களூரின் அனேகல் என்ற பகுதியில் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு இருக்கும் பேருந்து நிலையத்தில் பல மணி நேரமாக அந்த பெண் ஆடையில்லாமல் படுத்து இருந்துள்ளார்.
மேலும் இவர் உடலில் நிறைய காயங்களும், எலும்பு முறிவுகளும் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது இந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

வன்புணர்வு
அந்த பெண்ணின் குடும்பத்தில் உள்ளவர்கள் சில வருடம் முன்பு நடந்த நிலநடுக்கம் ஒன்றில் மொத்தம் இறந்து போய் இருக்கிறார்கள். வீட்டின் கட்டிடம் இடிந்து விழுந்ததால் இந்த மரணம் நடந்து உள்ளது. இந்த பெண் தனியாக ஹோட்டல் ஒன்றில் 50 ரூபாய் சம்பளத்திற்கு பாத்திரம் கழுவும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறார். தினமும் இந்த பெண்ணை கவனித்த சிலர் ஒரு வாரத்திற்கு முன்பு அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

நடந்தது என்ன
இந்த பெண் வீட்டிற்கு திரும்பும் சமயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 6 அடையாளம் தெரியாத நபர்கள் வந்து அந்த பெண்ணை அடித்து அருகில் இருந்து காட்டுப்பகுதிக்குள் கூட்டி சென்றுள்ளனர். அங்கு ஆறு பேரும் இந்த பெண்ணை கொடூரமாக வன்புணர்வு செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் கால்களை கல்லால் அடித்து உடைத்து உள்ளனர். கையையும் திருகி உடைத்துள்ளனர். இரவு முழுக்க இந்த கொடுமை நடந்துள்ளது.

உயிருக்கு போராட்டம்
உயிருக்கு போராடிக் கொண்டு அந்த பெண் அதே இடத்தில் இரவு முழுக்க கிடந்து இருக்கிறார். அதன்பின் கொஞ்சமாக தரையில் ஊர்ந்து வந்து பக்கத்தில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் படுத்துள்ளார். பின் குப்பையில் கிடந்த துணியை உடலில் சுற்றி அங்கேயே 36 மணிநேரமாக சாப்பாடு இன்றி கஷ்டப்பட்டு இருக்கிறார். அந்த பெண்ணுக்கு யாரும் உதவி செய்யக்கூட முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதி
அந்த பெண்ணை பார்த்த பாரிஜாதா ஜி.டி என்று சமூக ஆர்வலர் அவரை மீட்டு உள்ளார். பின் அங்கு இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இவர் போலீசில் தனக்கு நடந்த அனைத்து நிகழ்வுகளையும் வாக்குமூலமாக அளித்துள்ளார். நிர்பயா உதவித் தொகை திட்டத்தில் இருந்து இந்த பெண்ணுக்கு உதவி பெற்றுத்தரப்படும் என்று கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications