2 ஒலிபெருக்கிகளை பயன்படுத்திய ஆம் ஆத்மி வேட்பாளர் கைது: 14 நாட்கள் சிறை
நைனிடால்: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இரண்டு ஒலிபெருக்கிகளைப் பயன் படுத்தியதற்காக நைனிடால் லோக்சபா தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் கைது செய்யப் பட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் வேட்பாளர் பாலி சிங் சீமா போட்டியிடுகிறார். இவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது வாகனத்தில் ஒரு ஒலிபெருக்கிக்கு பதிலாக இரண்டு ஒலிபெருக்கிகள் பொருத்தியிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிக சத்தத்துடன் பிரசாரம் மேற்கொள்வதாக பாலி சிங் மீது புகார் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாலி சிங்கின் பிரசார வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தனது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலி சிங், தனது தொண்டர்களுடன் சேர்ந்து போலீசாரின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தினார். இதனையடுத்து பாலி சிங் மற்றும் அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் 14 நாட்கள் நீதிமன்றக்காவலுக்கு அனுப்பப்பட்டனர்.












Click it and Unblock the Notifications