டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் மோடி அரசின் மீதான வாக்கெடுப்பே: ஆம் ஆத்மி, காங்கிரஸ்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகள் மீதான வாக்கெடுப்புதான் என்று ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலில் வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது. இத்தேர்தல் குறித்து கருத்து தெரிவித்திருந்த மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, டெல்லியில் பிரதமர் மோடி போட்டியிடவில்லை. இத்தேர்தல் டெல்லி முதல்வரைத்தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.

இத்தேர்தல் முடிவுகளை பிரதமர் நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அளிக்கும் கருத்துகளின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியிருந்தார். இதே கருத்தை பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷாவும் கூறியிருந்தார்.
ஆனால் வெங்கையா நாயுடுவின் இக்கருத்துக்குப் பதிலளித்துள்ள ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணி சிசோடியா, டெல்லி தேர்தல் முடிவுகளைக் கண்டு பா.ஜ.க. அஞ்சுகிறது. டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு உட்பட பல்வேறு விஷயங்களின் மோடி அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்த இருக்கிறது டெல்லி தேர்தல் முடிவுகள் என்றார்.
மற்றொரு ஆம் ஆத்மி தலைவரான ஆஷிஸ் கேத்தான் கூறுகையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு லோக்சபா தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். மோடி அரசு யு டர்ன் அரசாக இருக்கிறது.
டெல்லியில் நடைபெற இருப்பது முதல்வருக்கான தேர்தல்தான். 8 மாதங்களுக்கு முன்னரே பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். டெல்லியில் வாரத்தின் 7 நாட்களும் 24 மணிநேரமும் செயல்படக் கூடிய முதல்வரைத்தான் மக்கள் விரும்புகின்றனர்.
இங்கு குடிநீர், கல்வி, மின்சாரம், பாதுகாப்பு என 16 பிரச்சனைகள் இருக்கின்றன. இவற்றைத் தீர்க்கக் கூடிய ஒரு முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவாலைத்தான் டெல்லிவாக்காளர்கள் பார்க்கின்றனர் என்றார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் ஆனந்த்சர்மா கூறுகையில், கடந்த 9 மாதங்களாக பாரதிய ஜனதா ஆட்சி நடத்தி வருகிறது. அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
கச்சா எண்ணெய் விலை சரிவு கூட சர்வதேச சந்தையில் நிகழ்ந்த மாற்றமே. நாட்டின் உற்பத்தி குறைந்து போய்விட்டது. பொருளாதார மேம்பாடு என்பது எங்கே என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது. டெல்லி என்பது 29 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசத்தவர் வசிக்கும் மாநிலம். இது மோடி அரசு மீதான வாக்கெடுப்பாக கருதலாம்.
நாடு விடுதலை அடைந்ததில் இருந்து ஒரு சட்டசபை தேர்தலில் ஒரு பிரதமர் இப்படி கண்ணியகுறைவான வார்த்தைகளை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியதே இல்லை என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications