மைத்துனி கொடுத்த பாலியல் புகார்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானதுல்லா கான் ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ., அமானதுல்லா கான் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஆம் ஆத்மியில் தலைவர்கள் மீது பாலியல் புகார் அடுத்தடுத்து பதிவாகி வருகின்றன. டெல்லி வக்பு வாரியத் தலைவராக, ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் இருந்தார். இவர் மீது அவரது மைத்துனி போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அமானத்துல்லா கான் தன்னுடைய தனிமையில் இருக்குமாறு என்னை வற்புறுத்துகிறார். இதற்காக பல்வேறு விதத்திலும் அவர் எனக்கு நிர்ப்பந்தம் கொடுத்தார். மேலும், அவருடன் சேர்ந்து என் கணவரும் வரதட்சணை வாங்கி வருமாறு என்னை கொடுமைப்படுத்துகிறார்.

AAP MLA Amanatullah Khan resigns from all posts

அமானத்துல்லாவுடன் இணங்கிச் செல்லுமாறும் வற்புறுத்துகிறார் என்று கூறியுள்ளார். இதையடுத்து, ஜாமியா நகர் போலீசார் அமானத்துல்லா கான் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதனால் வக்பு வாரியத் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு ஆம் ஆத்மி கட்சித் தலைமை அவருக்கு உத்தரவிட்டதாக தெரிகிறது. இதனால் அவர் நேற்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த புகார், திட்டமிட்டு நடக்கும் அரசியல் சதி என்று, அமானதுல்லா கான் மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும், வக்ஃப் வாரியத் தலைவர் மற்றும் எம்எல்ஏ.பதவி ஆகியவற்றை ராஜினாமா செய்வதாகவும் அமானதுல்லா அறிவித்துள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி தலைவர்கள் பலர், பாலியல் புகார்கள் உள்ளிட்டவற்றில் சிக்கி பதவியை இழந்து வருகின்றனர். சமீபத்தில் பெண்களுடன் தனிமையில் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியானதால் அமைச்சர் சந்தீப் குமார் பதவி பறிக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+