யாரையும் கூப்பிட மாட்டோம்.. மக்கள் மட்டுமே போதும்.. ஆம் ஆத்மியின் அடுத்த அதிரடி
Recommended Video
டெல்லி: டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கவுள்ள நிலையில் பதவியேற்பு விழாவுக்கு எந்த அரசியல் தலைவரையும், பிற மாநில முதல்வர்களையும் அழைக்கப் போவதில்லை என்று கூறியுள்ளது அக்கட்சி.
வழக்கமாக இதுபோன்ற பிரமாண்ட வெற்றி பெறும் கட்சிகள் எல்லாம் செய்யும் முதல் வேலை பெரிய பில்டப்போடு பதவியேற்பு விழாவை நடத்துவதுதான். ஆனால் அதிலும் கூட ஆம் ஆத்மி படு எளிமையாக, அடக்கமாக இருப்பது அவர்களிடம் வீழ்ந்த கட்சிகளுக்கு மேலும் சில பாட்டில் ஜெலுசின்கள் தேவைப்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்தப் போவதாக அக்கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் கூறியுள்ளார். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

டெல்லி மக்கள் போதும்
இது முற்றிலும் டெல்லி தொடர்புடையது. டெல்லியின் முதல்வராகவே கெஜ்ரிவால் பதவியேற்கவுள்ளார். எந்த முதல்வரையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் நாங்கள் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப் போவதில்லை. பிப்ரவரி 16ம் தேதி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும்.

தலைவர்கள் வேண்டாம்
முற்றிலும் டெல்லி மக்கள் மட்டும் இதில் பங்கேற்பார்கள். மக்கள் முன்னிலையில்தான் கெஜ்ரிவால் 3வது முறையாக முதல்வராக பதவியேற்பார். மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக ஆம் ஆத்மி ஆட்சி தொடரும் என்றார் ராய். இதன் மூலம் பகட்டு, படோடபம் இல்லாமல் சிம்பிளாக மக்களின் முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்கவுள்ளார் என்பதை ஆம் ஆத்மி கட்சி தெளிவுபடுத்தி விட்டது.

3வது முறை
டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை வென்று பிரமாண்ட வெற்றியைப் பெற்று ஆட்சியை தக்க வைத்தது ஆம் ஆத்மி கட்சி. 3வது முறையாக முதல்வராகியுள்ளார் கெஜ்ரிவால். பிப்ரவரி 16ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பாஜகவுக்கு கடந்த தேர்தலை விட கூடுதலாக 5 இடங்கள் கிடைத்தன. அதாவது மொத்தம் 8 இடங்களில் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் பரிதாபம்
காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறையும் தேர்தலில் பெரும் தோல்வியே கிடைத்தது. கடந்த முறை அக்கட்சிக்கு பூஜ்ஜியம் வெற்றிதான் கிடைத்தது. இந்த முறையும் அதுவே கிடைத்தது. அதை விட மோசமாக 63 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் தொகையைப் பறி கொடுத்து பெரும் அவமானத்தையும் சந்தித்துள்ளனர். இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் கூட காங்கிரஸார் மீளவில்லை.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications