யாரையும் கூப்பிட மாட்டோம்.. மக்கள் மட்டுமே போதும்.. ஆம் ஆத்மியின் அடுத்த அதிரடி
Recommended Video
டெல்லி: டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கவுள்ள நிலையில் பதவியேற்பு விழாவுக்கு எந்த அரசியல் தலைவரையும், பிற மாநில முதல்வர்களையும் அழைக்கப் போவதில்லை என்று கூறியுள்ளது அக்கட்சி.
வழக்கமாக இதுபோன்ற பிரமாண்ட வெற்றி பெறும் கட்சிகள் எல்லாம் செய்யும் முதல் வேலை பெரிய பில்டப்போடு பதவியேற்பு விழாவை நடத்துவதுதான். ஆனால் அதிலும் கூட ஆம் ஆத்மி படு எளிமையாக, அடக்கமாக இருப்பது அவர்களிடம் வீழ்ந்த கட்சிகளுக்கு மேலும் சில பாட்டில் ஜெலுசின்கள் தேவைப்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்தப் போவதாக அக்கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் கூறியுள்ளார். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

டெல்லி மக்கள் போதும்
இது முற்றிலும் டெல்லி தொடர்புடையது. டெல்லியின் முதல்வராகவே கெஜ்ரிவால் பதவியேற்கவுள்ளார். எந்த முதல்வரையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் நாங்கள் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப் போவதில்லை. பிப்ரவரி 16ம் தேதி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும்.

தலைவர்கள் வேண்டாம்
முற்றிலும் டெல்லி மக்கள் மட்டும் இதில் பங்கேற்பார்கள். மக்கள் முன்னிலையில்தான் கெஜ்ரிவால் 3வது முறையாக முதல்வராக பதவியேற்பார். மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக ஆம் ஆத்மி ஆட்சி தொடரும் என்றார் ராய். இதன் மூலம் பகட்டு, படோடபம் இல்லாமல் சிம்பிளாக மக்களின் முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்கவுள்ளார் என்பதை ஆம் ஆத்மி கட்சி தெளிவுபடுத்தி விட்டது.

3வது முறை
டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை வென்று பிரமாண்ட வெற்றியைப் பெற்று ஆட்சியை தக்க வைத்தது ஆம் ஆத்மி கட்சி. 3வது முறையாக முதல்வராகியுள்ளார் கெஜ்ரிவால். பிப்ரவரி 16ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பாஜகவுக்கு கடந்த தேர்தலை விட கூடுதலாக 5 இடங்கள் கிடைத்தன. அதாவது மொத்தம் 8 இடங்களில் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் பரிதாபம்
காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறையும் தேர்தலில் பெரும் தோல்வியே கிடைத்தது. கடந்த முறை அக்கட்சிக்கு பூஜ்ஜியம் வெற்றிதான் கிடைத்தது. இந்த முறையும் அதுவே கிடைத்தது. அதை விட மோசமாக 63 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் தொகையைப் பறி கொடுத்து பெரும் அவமானத்தையும் சந்தித்துள்ளனர். இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் கூட காங்கிரஸார் மீளவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications