ரொம்ப எதிர்பார்க்கிறார்களே மக்கள்.. கேஜ்ரிவாலின் 'முன்ஜாக்கிரதை'ப் பேச்சு!
டெல்லி: டெல்லி மக்களுக்கென பல திட்டங்களைத் தீட்டி வைத்துள்ளோம். சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கையும் உள்ளது. ஆனால் மக்கள் எங்கள் மீது அதிக அளவில் நம்பிக்கையும், எதிர்பார்ப்பையும் கொண்டுள்ளனர். அதுதான் பயமுறுத்துகிறது என்று கூறியுள்ளார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால்.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் 2வது இடத்தைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி அங்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைக்கப் போகிறது.
இன்று அக்கட்சியின் முதல்வர் யார் என்பதையும், அரசமைப்பது குறித்தும் இறுதி முடிவு எடுக்கவுள்ளது ஆம் ஆத்மி கட்சி. இந்த நிலையில் மக்களின் எதிர்பார்ப்பு அதீதமாக இருப்பதாகவும், அது தங்களைப் பயமுறுத்துவதாகவும் திடீரென கூறியுள்ளார் கேஜ்ரிவால்.

மக்களுக்கென நிறைய திட்டங்கள்
டெல்லி மக்களுக்கென பல தொலைநோக்குத் திட்டங்களை நாங்கள் வைத்துள்ளோம். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான திட்டங்கள் அவை.

பயமுறுத்துகிறது
ஆனாலும் மக்கள் எங்கள் மீ்து மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதீதமாக நம்பிக்கை வைத்துள்ளனர். இதுதான் பயமுறுத்துகிறது.

முதல்வரை எம்.எல்.ஏக்கள் முடிவு செய்வர்
எங்களது கட்சி சார்பில் யார் முதல்வர் பதவியில் அமர வேண்டும் எனபதை எனது கட்சி எம்.எல்.ஏக்கள் முடிவு செய்வர். அவர்களேத் தீர்மானிப்பார்கள் என்றார் கேஜ்ரிவால்.

கருத்துக் கேட்பு முடிந்தது
ஆட்சியமைக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து மக்களிடம் கேட்டு முடிவு செய்யப்படும் என்று கேஜ்ரிவால் முன்பு கூறியிருந்தார். அதன்படி கடிதம் மூலமாக, நேரில் என மக்களின் கருத்தை அவர் அறிந்தார். அந்தப் பணிகள் அனைத்தும் முடிந்தது. இதையடுத்து தனது கட்சியின் முடிவை இன்று முறைப்படி அறிவிக்கிறார் கேஜ்ரிவால்.

ஆளுநரை சந்திப்பாரா?
இன்று முற்பகல் செய்தியாளர்களிடம் பேசவுள்ளார் கேஜ்ரிவால். அப்போது தனது கட்சியின் முடிவை அவர் தெரிவிப்பார். அதன் பின்னர் அவர் ஆளுநர் நஜீப் சிங்கைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேறு வழியின்றி ஆதரவு தரும் காங்.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வந்தது. ஆனால் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஆட்சியமைக்காமல் ஒதுங்கி விட்டது. 2வது இடத்தில் உள்ள ஆம் ஆத்மி ஆட்சியமைக்கிறது. 3வது இடத்தில், வெறும் 8 எம்.எல்.ஏக்களுடன் உள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு ஆதரவு தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications